Friday, May 22, 2009

உயிர்த்தெழுந்தார் பிரபாகரன் !!

டகங்களில்ஈழம் பற்றிய செய்திகள் தாறுமாறாக வெளியாகிக்கொண்டே இருந்தன. இந்தியாவில்தேர்தல் முடிவுகளை மக்கள் அறிந்துகொண்டிருந்த நேரம். மே 16-ந் தேதிசனிக்கிழமையன்று வன்னிக் காட்டில் பாரிய அளவிலான திட்டம் ஒன்றிற்குத்தயாராகியிருந்தனர் விடுதலைப் புலிகள்.

நெருங்கிவரும் சிங்கள ராணுவ வளையத்தை ஊடறுத்துத் தாக்கி, புலிகளின் முக்கியத்தலைவர்கள் வெளியேறுவது என்பதுதான் அந்தத் திட்டம். புலிகளுக்கேயுரிய போர்வியூகங்களின்படி நடந்த இந்த ஊடறுப்புத் தாக்குதலில் 100க்கும் அதிகமானசிங்கள ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில், பிரபாகரனின்சமகாலத் தலைவரான சொர்ணம் இந்தத் தாக்குதலில் ராணுவத்தினரால் கொல்லப்பட,புலிகளின் முயற்சி தோல்வியடைந்தது.

களத்தில்இழப்புகள் சகஜமானதுதான் என்பதைப் புலிகள் அறிவார்கள். ஆனால், தங்களின்இலட்சியமான தமிழீழத் தாயகம் அமைவதற்கு எதை இழக்கவேண்டும் எதைக் காப்பாற்றவேண்டும் என்பதிலும் அவர்கள் கவனமாக இருப்பார்கள். அதனால், மே 17-ந்தேதியன்று புலிகளின் மூத்த தளபதிகள் அனைவரும், தங்களுக்கு வழக்கமாகக்கட்டளையிடும் பிரபாகரனிடம், கோரிக்கை வடிவில் ஒரு கட்டளை பிறப்பித்தனர்என்கிறார்கள் தொடர்பில் உள்ள வட்டாரத்தினர்.

தமிழீழத்தேசியத் தலைவர் அவர்கள் இங்கிருந்து வெளியேற வேண்டிய தருணம் இது.ஏணென்டால், சிங்கள ராணுவம் தனது பாரிய படைகளோடு நெருங்கி விட்டது. இதுஇந்தப் போரின் இறுதிக்கட்டம். இதிலிருந்து தலைவர் அவர்கள் மீண்டால்தான்அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுக்க முடியும். நம்முடைய இலட்சியமானதமிழீழத்தை வென்றெடுக்க முடியும் என்று தளபதிகள் சொன்னதை பிரபாகரன்ஏற்றுக் கொள்ளவில்லையாம். நமது மண்ணின் விடுதலைக்காகத்தான் நான்போராடுகிறேன். அதனால் கடைசிவரை இந்த மண்ணில்தான் இருப்பேன் என பிரபாகரன்உறுதியான குரலில் கூற, தளபதிகள் அவரிடம் நீண்ட நேரம் வாதாடியுள்ளனர். இந்தமண்ணில் உங்கட மகன் நின்று போராடட்டும். எங்கட தலைவராகிய நீங்கள்பாதுகாப்பான இடத்துக்குப் போயாக வேண்டும். அப்போதுதான் இந்தப் போராட்டம்எழுச்சியோடு தொடரும் என்று தங்களுடைய கோரிக்கைக்கு அழுத்தம்கொடுத்திருக்கிறார்கள்.

தளபதிகளின்கோரிக்கையை யோசித்த பிரபாகரன், தனது மகன் சார்லஸ் அந்தோணியை ஈழமண்ணில்இருக்கச் செய்து போரை தொடர்ந்து நடத்தச் சொல்லிவிட்டு, தளபதிகள்கூறுவதுபோல, அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற நீண்ட யோசனைக்குப்பின்சம்மதித் துள்ளார்.

இதையடுத்து,மே 17-ந் தேதி ஞாயிறன்று இந்தியாவின் ஆங்கில ஊடகங்களில் ஈழநிலவரம்குறித்து சிங்கள அரசு பரப்பிய தகவல்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த நேரத்தில், புலிகள் ஒரு பெருந் தாக்குதல் திட்டத்திற்குத்தங்களைத் தயார்படுத்தியிருந்தனர் என்கிறது கள நிலவரம். மிகச் சரியாகவியூகம் வகுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட அந்தத் திட்டம் இதுதான் என்றும்அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

5000கிலோ வெடிமருந்துகளை தங்கள் உடலில் கட்டிக்கொண்டு 30-க்கும் அதிகமானகரும்புலிகள் ஊடறுப்புத் தாக்குதல் நடத்துவது என்ற திட் டத்தின்படிஇருவரணி, மூவரணியாக கரும்புலிகள் பிரிந்து, முன்னேறி வந்த சிங்களராணுவத்தினர் மீது தற்கொலைத் தாக்குதலை நடத்தினர். விடுதலைப்புலிகளின்மற்ற படையணியினரும் சரமாரியாக சுட்டுக்கொண்டே ராணுவத்தை எதிர்த்துவீரச்சமர் புரிந்தனர்.

தொடர்ந்துமுன்னேற்றம் கண்டு வந்த சிங்கள ராணுவம் இதனை எதிர்பார்க்க வில்லை. தங்கள்உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் தலைவரைப் பாது காப்பதற்கான ஊடறுப்புத்தாக்குதலில் ஈடுபட்ட புலிகளை ராணுவத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை.இருதரப்பிலும் கடும் சண்டை நடந்த அவ்வேளையில், வெடிமருந்துகளுடன் பாயும்புலிகளைக் கண்டு ராணுவம் சிதறியது. இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி,பிரபாகரனை அங்கிருந்து பாதுகாப்பாக கொண்டு சென்றனர் தளபதிகள்.

புலிகளின்வசமிருந்த கடல்பகுதியில் போர்த்துகீசியர்கள் காலத்தில் கட்டப் பட்டிருந்தகோட்டை ஒன்று உண்டு. அந்தக் கோட்டைக்குள் பிரபாகரனை அழைத்துச் சென்றனர்.அந்தக் கோட்டையின் கீழ்ப் பகுதியில் பழையகாலத்து சுரங்கப்பாதை உள்ளது.அந்த சுரங்கப்பாதை வழியாக பிரபாகரனை முள்ளிவாய்க்கால் கடற் பகுதிக்குஅழைத்துச்சென்றனர். அங்கே கடற்புலிகளின் படகு தயாராக இருந்தது. அதில்பிரபாகரனை ஏறச் செய்தனர்.

அதேவேளையில்,வன்னிக்காட்டில் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியது. அப்போது, இன்னொருதற்கொலைப் படையும் படையணியும் வீரம் செறிந்த தாக்குதலைத் தொடர்ந்தது.மீண்டும் ராணுவத்தினர் சிதற, அந்தத் தருணத்தில் பொட்டு அம்மான்பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். அப்போது திறம்படக் களமாடியவர் சார்லஸ்அந்தோணி. புலிகளின் தாக்குதலில் சிதறி ஓடுவதும், மீண்டும் ராணுவம் தாக்கவருவதுமாக வன்னிக் களம் அதிர்ந்து கொண்டிருந்த நிலையில், கடற்புலிகளின்தளபதியான சூசையை பாதுகாப்பாக வெளியே அனுப்பும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

தன்குடும்பத்தின் மீது அதிகப் பாசம் கொண்டவர் சூசை. அவரது மனைவியும் 17 வயதுமகளும் ராணுவத்தின் பிடியில் சிக்கி சில நாட்கள்தான் ஆகின்றன. மனதைகல்லாக்கிக்கொண்டு, இலட்சி யத்தின் அடுத்த கட்டத்தை அடைவதற்காகபாதுகாப்பாக வெளியேறினார் சூசை.



புலிகளின்அடுத்தடுத்து 23 தற்கொலை தாக்குதல் சம்பவங் களால் இரண்டாயிரத்திற்கும் அதிகமான சிங்கள ராணுவத்தினர் செத்து விழுந்தனர். இந்தத் தாக்குதல்களைமுன்னின்று நடத் திய பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி, சிங்களராணுவத்தின் தாக்குதலுக்குள்ளாகி களப்பலி யானார். புலிகளின் கடைசிநேரஅதிரடித் தாக்குதல், சிங்கள ராணுவத்தின் 58-வது டிவிஷனை நிலைகுலையவைத்தது. புலிகள் அடிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்ற பயபீதியில்ராணுவத்தினர் சிதறி ஓடினர்.வன்னிக்காடு புகை மண்டலமானது. கடைசி இலக்கைநெருங்கிவிடலாம் என நினைத்த ராணுவத்தின் கண்களை கரும்புகை மறைத்து,முன்னேற் றத்தை முடக்கியது.


இதனால்பிரபாகரனையும் பொட்டு அம்மான், சூசை ஆகி யோரையும் பாதுகாப்பாகவெளியேற்றுவது சாத்திய மானது. அவர்கள் தனித்தனி படகில் ஒருவர் பின்ஒருவராகப் பயணித்தனர். கடற்புலிகள் பயன் படுத்தும் படகுகளின் வேகம் சிங்களராணுவத்தை மிரள வைக்கக்கூடியது. உதாரணத்திற்கு, ராமேஸ்வரத்திலிருந்துஇலங்கைக்குச் செல்ல வேண்டுமென்றால் 12 நிமி டங்களில் அந்தப் படகின்மூலமாகச் சென்று விட லாம். மின்னல் பாய்ச்சலில் செல்லும் அத்தகையபடகுகளில் பிரபாகரனும் முக்கியத் தளபதிகளும் பயணித்து, இலங்கையி லிருந்துகிழக்குத் திசை நோக்கி 3 மணி நேரப் பய ணத்தில் பாதுகாப்பான இடத்தைஅடைந்துள்ளதாக கள நிலவரங் கள் தெரிவிக்கின்றன.

சிங்களகடல் எல்லைக்குட்பட்ட ராணுவக் கப்பல்களை ஏமாற்றி விட்டுச் செல்வதுபுலிகளுக்கு கைவந்த கலை. அதே நேரத்தில், சர்வதேச கடல் எல்லையில்இலங்கைக்காகத் தீவிரக் கண்காணிப்பை மேற்கொண்டிருக்கும் இந்தியக் கடற்படைக் கப்பல்களின் கண்ணில் மணலை அள்ளிக்கொட்ட முடியுமா என்ற தயக்கம்புலிகள் தரப்பிலேயே இருந் திருக்கிறது. ஆனால், இந்தியக் கடற்படைக்குஏற்கனவே உரிய உத்தரவுகள் இடப்பட்டிருந்தன. இலங்கையிலிருந்து வெளியேறும்படகுகளைப் பிடித்துக் கொடுப்பது நமது வேலையல்ல என்பதுதான் அந்த உத்தரவு.பலவித பிரஷர்களால் இந்த உத்தரவு இடப்பட்டிருந்தது. அதனால், அந்த மின்னல்வேகப்படகு சீறிச் சென்றபோது, மேலிடத்து உத்தரவுக்கேற்ப இந்தியக் கடற்படைதனது செயல்பாடுகள் எதையும் மேற்கொள்ளவில்லையாம்.

ஞாயிறன்றுபுலிகள் மேற்கொண்ட இந்த வெற்றிகரமான ஊடறுப்புத் தாக்குதலுக்குப்பிறகுதான், திங்கட்கிழமையன்று காலையில் கடைசி நிலப்பரப்பையும்பிடிப்பதற்கான கொடூரத்தாக்குதலை சிங்கள ராணுவம் மேற்கொண்டது. பீரங்கிகள்,எறிகணைகள் ஆகியவற்றை அதிகளவில் பயன்படுத்தி தாக்குதலை நடத்தியபடியேமுன்னேறிய ராணுவம், பிரபாகரன் தங்கியிருப்பதாகத் தங்களுக்கு தகவல் வந்தபகுதியில் சகட்டுமேனிக்குத் தாக்குதல் நடத்தி கரும்புகை மண்டல மாக்கியது.எஞ்சியிருந்த புலிகளையும் அப்பாவி மக்களையும் சிங்கள ராணுவத்தின்ஆயுதங்கள் உயிர் குடித்தன.

அந்தத்தாக்குதலின்போதுதான், குண்டு துளைக்காத கவசம் கொண்ட ஒரு ஆம்புலன்ஸ்வண்டியில் பிரபாகரனுடன் பொட்டு அம்மான், சூசை ஆகியோர் தப்பிக்கமுயன்றதாகவும் அந்த வண்டிக்கு முன்னால் ஒரு வாகனத்தில் வந்த புலிகள்,ராணுவத்தை நோக்கித் தாக்குதல் நடத்தியதாகவும், பதில் தாக்குதலாக ராக்கெட்லாஞ்சர்களை ராணுவம் ஏவியபோது, பிரபா கரனும் தளபதிகளும் சென்ற ஆம்புலன்ஸ்வண்டி தாக்கப்பட்டு மூவரும் கொல்லப் பட்டதாகவும் சிங்கள அரசுமீடியாக்களுக் குப் பரப்பியது. அதனை இந்தியாவின் ஆங்கில சேனல்கள்நொடிக்கொரு முறை பரப்பிக் கொண்டி ருந்தன.



ஞாயிறுஇரவி லும் திங்கள் காலை யிலும் சிங்கள ராணுவம் நடத்திய கொடூரத்தாக்குதலில் புலிப்படையினர் பெரு மளவில் பலியாயினர். பிரபாகரன் உள்ளிட்டஅனைத்து தளபதி களின் கதையையும் முடித்துவிட்டோம் என சிங்கள அரசுகொக்கரித்துக் கொண்டிருந்தது. புலிகளை முற்றிலும் ஒழித்துவிட்டதாக பிரணாப்முகர்ஜியைத் தொடர்புகொண்டு ராஜபக்சே தெரிவித்தார்.


பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என இந்திய வெளியுறவுத்துறையும் நம்பியது. இதனை அத்துறையின் செய்தி தொடர் பாளரே பிரஸ் மீட்டில் தெரிவித்தார்.

வன்னிக்காட்டில்சிதறிக் கிடந்த புலிகளின் உடல்களை ராணுவத்தினர் வரிசையாக அடுக்கிவைத்திருந் தனர். சில உடல் கள் கருகியிருந்தன. பிரபாகரன் உள் ளிட்டபுலிகளின் முக்கியத் தலைவர் களை அடையாளம் காண்பதற்காக கருணாவைகொழும்பிலிருந்து தனி ஹெலிகாப்டரில் அழைத்து வந்தது சிங்கள ராணுவம்.புலிகளால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் இருந்த கருணா,அவர் கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டார்கள் என்ற தகவலைக் கேட்டு,உற்சாகமாகத்தான் காட்டுப்பகுதிக்கு வந்தார். வரிசையாகக் கிடத்தி வைக்கப்பட்டிருந்த சடலங்களைப் பார்த்த அவருக்கு அதிர்ச்சி.

சிங்களராணுவம் கொன்றதாகச் சொல்லப்பட்ட புலிகளின் தளபதிகளில் ஒருவரின் உடலைக்கூடகருணாவால் அங்கு பார்க்க முடியவில்லை. உதட்டைப் பிதுக்கிவிட்டுத்திரும்பிய கருணா, "மொக்கச் சிங்களனுங்க கோட்டை விட்டுட்டானுங்க' எனத் தனதுசகாக்களிடம் சொல்லி யிருக்கிறார்.

இந்தநிலையில், செவ்வாயன்று காலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றியஅதிபர் ராஜபக்சே, விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி எதுவும்சொல்லாதது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. பகல் 12 மணியளவில்,நந்திக்கடல் பகுதியில், தலையில் சுடப்பட்ட பிரபாகரனின் உடல் கிடந்ததாகசிங்கள ராணுவம் அறிவித்து, தான் எடுத்த சில க்ளிப்புங்கு களைமீடியாக்களுக்குக் கொடுத்தது.

பிரபாகரனின்தோற்றத்தை விட மெலிந்திருந்தது உடல். அவர் கையில் எப்போதும்கட்டியிருக்கும் வாட்ச் இல்லை. கழுத்தில் கயிறு அணிந்து பாக் கெட்டில் சயனைடு குப்பி வைத்தி ருப்பது வழக்கம். ஆனால், சிங்கள ராணுவம் காட்டியபடத்திலோ சயனைடு குப்பி இல்லை. ஐடென்ட்டி கார்டு காட்டப்பட்டது. இப்படி பலமுரண்பாடுகளைக் கொண்ட க்ளிப்புங்கு களைக் காட்டியதுடன், மதியம் கண்டுபிடிக்கப்பட்ட உடலை ஒரு சில மணிநேரத்தில் டி.என்.ஏ சோதனை மூலமாகஉறுதிப்படுத்தி விட்டதாகவும் சிங்கள அரசு தம்பட்ட மடித்தது.

தண்ணீரில்கிடந்த உடல் எனச் சொல்லப்பட்ட நிலையில் கைகள் மட்டும் ஊறியிருக்க, முகம்நன்கு ஷேவ் செய்யப்பட்ட நிலையில் மொழுமொழுவென இளவயது பிரபாகரன் போல்இருந்தது. இது எப்படி சாத்தியம் என்பதை தசாவதாரம் படத்தில் மாஸ்க் அணிந்தகமலை பத்து கெட்டப்புகளில் பார்த்த தொழில்நுட்பம் அறிந்தவர்களால் விளக்கமுடியும் என்கிறார்கள் தடயவியல் துறையினர்.

சிங்களஅரசின் பிரச்சாரத்தை ஊடகங்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பிக் கொண்டிருந்தவேளையில், நக்கீரனின் தொடர்ச்சியான முயற்சிகளின் மூலம் கிடைத்திருக்கும்உறுதி யான தகவல், உலகத் தமிழர்களின் நேசத்திற்குரிய விடுதலைப்புலிகளின்தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதுதான். பிர பாகரனின் மனைவி,மகள், இரண்டாவது மகன் ஆகியோர் பாதுகாப்பாக வெளிநாட்டில் உள்ளனர்.

தன்னுடையபாதுகாப்பு ஏற்பாடுகளை சரிவர ஏற்படுத்திக்கொண்டபிறகு , பிரபாகரனேஊடகத்தில் தோன்றி உரையாற்றுவார். அதுவரை சிங்கள ராணுவம் தனது தரப்புச்செய்திகளை பரப்பிக்கொண்டிருக்கும். பிரபாகரன் ஊடகங் களில் உரையாற்றும்போதுசிங்கள அரசின் மாஸ்க் முகம் அம்பலத்திற்கு வரும் என்கி றார்கள் மிகமிகமுக்கியமானவர்கள். நக்கீரனுக்கு கிடைத்துள்ள இந்தத் தகவல், ஆயிரம் மடங்குநம்பகத்தன்மை வாய்ந்தது என்பதை வாசகர்களிடம் உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

Wednesday, May 13, 2009

அரசியல்னா

அரசியல்னா சாக்கடை அதை சுத்தம் செய்ய முடியாது. இதுதான் பெரும்பாலானவர்கள்சொல்லும் கருத்து.நமக்கு எல்லாம் காமராசர் மாதிரி தலைவர் வேணும் . எப்படி ? அம்மாவுக்குமின்விசிறி, போர்வை வேணும்னா , ரெண்டும் எதுக்கு ஒரே நேரத்துல? ஒண்ணுதான்வாங்கி தர முடியும்னு சொல்ற மாதிரி ஒரு தலைவர். தன்னலமே இல்லாம உழைக்கும் ஒருதலைவர்.ஆனா நம்ம எப்படி இருப்போம். ஒருத்தன விட காசு இன்னோருத்தவன் கொடுத்தா அங்கவேலைக்கு போவோம். ஒரு ஃப்ளாட் , கார், 29 இன்ச் கலர் டீவி , வித விதமா செல்போன் இதெல்லாம் நமக்கு வேணும். அது மட்டும் இல்லாம வீக் எண்ட்ல வீட்ல ஒரு நாள்நல்ல தூக்கம், ஒரு நாள் ஷாப்பிங்னு இருக்கனும். சுயநலத்தின் மொத்த உருவமா நாமஇருப்போம். ஆனா நமக்காக உழைக்க ஒரு தியாகி நமக்கு வேணும். என்னங்கடாவிளையாடறீங்களா?படிக்காதவனுக்கு இலவச பொருட்களை கொடுத்து அரசியல் கட்சிகள் ஏமாத்துதுனு வாய்கிழிய பேசுவோம் . பழியெல்லாம் எழுத படிக்க தெரியாதவன் பேர்ல போட்டுடுவோம்.தமிழ் நாட்டோட Literacy rate 73%.. அப்ப எழுத படிக்க தெரிஞ்சவனெல்லாம் ஒழுங்காஓட்டு போட்டாலே நிச்சயம் நிலைமை மாறும், ஆனா எலக்ஷனப்ப ஓட்டு போட சொல்லி லீவ் கொடுத்தா வீட்ல உக்கார்ந்து ஜாலியா டீவி பார்ப்போம் இல்லைனா சொந்த வேலைகளை பார்ப்போம். கேட்டா ,வாக்காளர் அடையாள அட்டை இல்லை ,ரொம்ப நேரம் லைன்ல நிக்கனும்னு நொண்டி சாக்கு சொல்லுவோம்.லைசன்ஸ் எடுக்கஎடுக்கற முயற்சியிலயோ இல்லை பாஸ்போர்ட் வாங்க எடுக்கற முயற்சியிலையோ பாதிக்கூட முயற்சிசெய்யமாட்டோம். திருப்பதிலஒரு நாள்கூட க்யூல நிப்போம், அதே எலக்ஷன்ல ஓட்டு போட நிக்கமாட்டோம் . கேட்டா, நான்ஒருத்தவன் போடற ஓட்டால பெருசா என்னத்த ஒருசப்ப காரணம் சொல்லுவோம். வீட்ல உக்கார்ந்து நொண்டி நியாயம் பேசிட்டு அரசியல்வாதி நல்லவனாஇருக்கனும், படிக்காதமக்களுக்கு விழிப்புணர்ச்சி வரணும் இப்படி கண்டத பேசுவோம். ஆனா அதே நேரம்தெருவுல நம்ம வீட்டுக்கு முன்னாடி இருக்கற குப்பையை கூட கொண்டு போய் ஒரு குப்பைதொட்டில போட மாட்டோம்.வாங்கற எந்த பொருளுக்கும் பில் போட்டு வாங்க மாட்டோம். பில் போட்டா ஒரு ரூபாய்,ரெண்டு ரூபாய் அதிகமாகும்னு கடைக்காரன் சொன்னா சரி வேண்டாம்னு சொல்லிடுவோம்.இல்லைனா பில் போட 5 நிமிஷமாகும்னு சொன்னா வேணாம்னு சொல்லிடுவோம். நம்ம பண்றசின்ன சின்ன தப்பெல்லாம் நமக்கு தப்பாவே தெரியாது. அதை பத்தி நாம ஒரு நிமிஷம்கூட கவலைப்பட மாட்டோம் .எத்தனை பேர் நியாயமா வரி கட்டறோம்? எப்படி எல்லாம் அரசாங்கத்தை ஏமாத்த முடியுமோஅப்படியெல்லாம் ஏமாத்துவோம் . வாங்கற போருள் எதுக்கும் பில் வாங்காம கடைக்காரன்ஏமாத்தவும் உறுதுணையா இருப்போம் . இப்படி இருக்கற நாம கருணாநிதி சுயநலவாதி ,ஜெயலலிதா சர்வாதிகாரினு வாய்கிழிய பேசுவோம்.ரோட்ல கிடக்கற ஒரு வாழைப்பழ தோலைக்கூட எடுத்து குப்பைத்தோட்டில போடாத அளவுக்குசமூக அக்கறை கொண்ட நமக்கு, ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய்க்காக (ஒரு நிமிடம்,இரண்டு நிமிடத்திற்காக ) நேர்மையை இழக்கும் நமக்காக, தலைவர்கள் என்ன வானத்துலஇருந்தா வருவாங்க?அவுங்க அவுங்க தன்னால முடிஞ்ச அளவுக்கு பிரச்சனையில்லாத அளவுக்கு ஏமாத்தறோம்.அவ்வளவுதான்.படிச்சவன் எல்லாம் சாலைவிதிகளை கடைபிடித்தால், குப்பைகளை சரியான இடத்தில்போட்டால் அதை விரைவில் அனைவரும் பின்பற்ற ஆரம்பித்துவிடுவார்கள். வீட்லஉக்கார்ந்து கேவலமான டீவி சீரியல் பாக்கற நேரத்துல, அரட்டை அரங்கம், டாப் டென்பாக்கற நேரத்துல ஒரு தெருவுல இருக்கவங்க எல்லாம் சேர்ந்தா அந்தா தெருவையேசுத்தப்படுத்திடலாம்.அதுமட்டுமில்லாம அரசாங்கம் தான் செய்யனும்னு இல்லாம தெருல இருக்கற பசங்களுக்கோஇல்லை டியூசன் போய் படிக்க வசதியில்லாத பசங்களுக்கோ பாடம் சொல்லி கொடுக்கலாம்,தெருவுல செடி நடலாம். இன்னும் எவ்வளவோ பண்ணலாம் . எல்லாரும் ஒரு நாளைக்கு ஒருஒரு மணி நேரம் வெட்டி நியாயம் பேசறத நிறுத்திட்டு வேலை செஞ்சா கண்டிப்பாஎல்லாத்தையும் மாத்தலாம். அது இல்லாம நமக்காக உழைக்க ஒரு தலைவன் வருவான், அவன்வாழ்க்கையை தியாகம் பண்ணுவானு, வானத்தையே பாத்துட்டு இருந்தா ஒரு மண்ணும்நடக்காது .நாடுனா தலைவன் இல்லப்பா, மக்கள் தான் ... மக்கள்னா வேற யாரும் இல்லை . நாமதான்....(இந்த கட்டுரை எனக்கும் சேர்த்துதான் )

மாற்றத்தை விரும்பும்,


சுரேஷ் குமார்

Saturday, May 9, 2009

மனிதாபிமானமா?மரத்துப்போன நிலையா?மானிடமே பதில் சொல்

இந்திய அரசாங்கத்தின் நேரடி உதவிகளுக்கு நாட்டு மக்கள் நன்றி தெரிவிக்க வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் போர் நிறுத்த கோரிக்கையினை நிராகரித்த இந்தியாவின்உறுதியான நிலைப்பாடு தொடர்பில் அந்நாட்டுக்கு இலங்கை மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றது. இது ஸ்ரீலங்காவின் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவின் கூற்று
இரண்டு தசாப்தங்களுக்ளுக்கு முன்னால் ஈழத் தமிழ் மக்களுக்கு அரைகுறையான தீர்வுத் திட்டத்தைக் கூடக் கொடுக்க விரும்பாத ஸ்ரீலங்காவின் சிங்கள இனவாதிகள், இன்று எப்படி ஈழத் தமிழினத்தை தங்களுடன் சமஉரிமை தந்து ஐக்கிய இலங்கையில் ஒன்றாக உயிருடன் வாழ விரும்புவார்கள் என்பதை சற்று நேரம் சிந்தித்துப் பார்த்தால் படிக்காத பாமரனால் கூட தெளிவாகப் புரிந்து கொள்ளமுடியும்.
அத்தகைய ஓர் நிலையில் இன்று முழுமையான இராணுவ உதவி, இராணுவ ஆலோசனை, இரணுவ உளவு வேலை,இராணுவ தொழில் நுட்பம், இராணுவ தளபாடங்கள், ஆட்கொல்லிகொத்தணி-பொஸ்பரஸ்-எரிவாயு குண்டுகள் இவற்றையெல்லாம் வாரிவழங்கிய பாரத அரசு ஸ்ரீலங்கா சிங்கள அரசிடமிருந்து பாராட்டுப் பத்திரத்தை நன்றியுடன் பெற்றிருக்கின்றது.
இதற்கு ஈடாக இந்திய அரசு அவர்களுக்குக் கைமாறாகக் கொடுத்தது பல்லாயிரக்கணக்கான தமிழீழ மக்களின் உயிர்களும், இலட்சக்கணக்கான தமிழீழ மக்களை சிங்கள இராணுவத்தின் அடிமைச் சேவகத்திற்கும், அப்பாவித் தமிழ் பெண்களை கட்டாயத்தின் பேரில் கற்பழிப்பு, கருக்கலைப்பு, கற்பத்தடை. இன்னோரன்ன அழிவுகளின் ஆபத்தான நிலை.
இதனைத் தொடர்ந்து பாரத அரசே! இன்னும் என்ன செய்யப் போகிறாய்? ஈழத் தமிழர்களின் இன்னல் களையவேண்டி உனது கரங்கள் அவர்களின் இடர்களுக்கும், அழிவுகளுக்கும் எதிரிகளுக்கு எல்லாவகையிலும் உதவிசெய்து உனது பாராட்டுப் பத்திரத்தை வாங்கிப் பத்திரப்படுத்தியிருக்கிறாய்.
போதுமா இது? இல்ல , இன்னமும் ஈழத் தமிழர்களைக் காவு கொடுத்து உனது கபடநாடகத் தனத்தை காட்ட முயற்சிக்கப் போகிறாயா? உலகம் முழுவதும் ஒன்றாகச் சேர்ந்து ஸ்ரீலங்கா அரசை யுத்தநிறுத்தம் எனும் முடிவினை இறுக்கமாகச் சொல்லிக் கொண்டிருக்க நீ மட்டும் கடைசிவரை வாய்மூடி மௌனமாக இருந்துவிட்டு இன்று தேர்தல் நாடகத்திற்காக உனது பசப்பு வார்த்தைகளையும், பாசாங்குகளையும் அரங்கேற்றுகின்றாய்.
சாதாரண மக்களுக்கு உனது நாடகமெல்லாம் தெரியாமல் போய்விடலாம். ஆனால் ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும் என்ற கூத்தவைப்புலவனின் கூற்று பொய்த்துவிடாது. எங்கள் அழிவினால் ஏற்பட்ட பாவம் உங்கள் பக்கத்திலேயே பங்குதாரர்களாக நிற்கின்றது.
அன்னை இந்திரா காந்தியினதும், அவர் தம் புதல்வர்கள் இருவரினதும் சாவுக்குக் காரணமானவர்கள் உங்கள் பக்கத்தில் இருந்த பசப்பு வார்த்தைகளால் உங்கள் கண்களையும் மறைத்துக் கொண்டிருக்கும் பாசாங்குக்காரர்கள் என்பது வெகுவிரைவில் உங்களுக்குத் தெரியவரும்
அப்போது, அவர்கள் மீதமாயிருக்கும் உங்களது விதியையும் முடித்துவிட்டு பழியை யார்தலையிலாவது போடுவார்கள். அதையும் ஆமாமம் சாமி என்று சொல்லிக்கொள்ள ஆயிரம்சாமிகள் அங்கே காத்திருப்பார்கள். முடிந்தால் உண்மையை உணர்ந்து திருந்த முயற்சியுங்கள். இல்லையென்றால் உங்களை அந்த ஆண்டவன் கூடக் காப்பாத்த முடியாது. எதிரிகள் என்றும் உங்கள் பக்கத்தில்.........
- சங்கிலியன் -

Friday, May 8, 2009

நாங்களும் இந்தியர்கள்தான்....

நாங்களும் இந்தியர்கள்தான் .....
நான் நன்றாக இருக்கிறேன், என்னகென்ன குறை ?!!!...
என் சகோதரர்கள் வெட்டப்படும்,
சகோதரிகள் கற்பழிக்கப்பட்டும், என் தமிழ்
குழந்தைகள் தலையையும் கைகளையும்
கால்களையும் தொலைத்துவிட்டு
சிதறிகிடப்பதை கண்டும் கூட செயலையோ
குரலையோ உயர்த்தும் என்
உரிமைகள் பரிக்கப்படாலும் - நான்
நன்றாகவே இருக்கிறேன், என்னகென்ன குறை ?
நரிகள் ஆண்டாலும், பாம்புகள் ஆண்டாலும்
நானும் என் பெற்றோரும் இங்கு
பாதுகாப்பாகவே இருக்கிறோம்

பின்னே !!
என் பாதுகாபிற்காக என்னை இன்றுவரை
சந்தித்திராத, என்னோடு பிறக்காத என்
சகோதரர்கள்தானே தன்னை பலியிட்டு
என்னை காத்து வருகிறார்கள் !!
வேறு எந்த நாடும் இலங்கையில் கால் வைக்க
கூடாது என்பதற்காக "சின்ன வீடு" இலங்கையை,
என் தேசம் வெட்கத்தை விட்டு எப்போதும் "தாஜா"
செய்யட்டும் - அதற்கு என் தமிழ் ரத்தம்தான் தரையெல்லாம்
பாய வேண்டுமா ??...

நாம் எதற்கும் கவலைப்பட வேண்டாம் ...
தினமும் 1 மணிநேரம் கடற்கரையில் ஓடினால்
100 வயது வரை வாழலாமாம் !!!...
அவர்கள் ஒரு நாள், ஒரே ஒருநாள்
சுதந்திரமாக வாழ்ந்துவிட வேண்டும் என்று
கழுத்தில் விஷத்தோடு கல்லிலும் முள்ளிலும்
ஓடுகிறார்களே அதைபோல !!!!...


யார் சொன்னது என் கடமைகள் எனக்கு தெரியாது என்று ??
"தமிழே, தாயகமே" என்று யார் முழங்கினாலும் கொடிபிடிக்கிறேனே
அது என் ஜனநாயக கடமை இல்லையா ?
இரவு எத்தனை மணி ஆனாலும் IPL ஆட்டத்தை பார்த்துவிட்டுதான்
மறுவேலை இது என் தேசிய உணர்வு இல்லையா ??
திரையில் தோன்றும் கூத்தாடிகளுக்கு
மாலை மரியதையோடு பாலாபிஷேகம்
செய்வோம் அது எங்கள் பக்தி பரவச உணர்வு இல்லையா ??

அரைகுறை ஆடை 'நிர்வாண கூத்தாடிகளான'
நடிகைகளுக்கு நாங்கள் கட்டாத கோவில்களா ??
இதைவிட வேறு என்ன பொறுப்புகளை நாங்கள் செய்யவேண்டும்
என்று நினைகிறீர்கள் ??

இதுகளும் இதுகளின் மன்றங்களும் என்
தமிழனுக்கு செய்யாத தொண்டா ??? !!!

என்னிடம் 'டிக்கெட்' பிட்சைஎடுக்கும் நடிகனையும்
ஓட்டு பிட்சைஎடுக்கும் தலைவரையும் நான்
உயிரினும் மேலாக கருதுகிறேன்...

பின்னே !!
என் இனம் தினம் தினம் சிதறி அழிவது கண்டு
தாளமுடியாமல், உறங்கமுடியாமல் பல
மாதங்களாக உயிர் வாழ்கிறார்கள் !!


உலகிலேயே கேட்பாரற்று மிக மிக மலிவாக
கிடைப்பது தமிழனின் உயிர்தான் ... !!!
"முன் தோன்றிய மூத்தகுடிமகன்" என்று சொல்லிகொண்டாலும்
நடத்தப்படுவது என்னவோ "மூத்தகுடி-மகன்" போலதான் ....
தமிழ் தூண்களின் திறமையும் திட்டமிடலும்
'மானாட மயிலாடவில்' தெரிகிறது ..
' ஸ்பெக்ட்ரத்தில்' கலர் கலராய் தெரிகிறது
தமிழனை காப்பாற்ற நாற்பதும் பேரும்
என்னமாய் உழைக்கிறார்கள் !!...

முதலில் எல்லோருக்கும் டிவி தருவதுதான் நல்லது !!
அப்போதுதான் என் இனம், என் குழந்தைகள் தினமும்
ரத்தம் தெறித்து சாவதை பார்த்து ரசிக்கலாம் ...பங்குசந்தையையும்,
அமெரிக்க பொருளாதாரத்தையும்,
மென்பொருள் ஏற்ற இரக்கத்தையும்,
IPL ஆட்டத்தையும்,
அற்புத நடிகர்களையும்,
அரைநிர்வாண நடிகைகளையும் உற்று கவணிக்கலாம்
ஒரு காலத்தில் இவை மட்டும்தான் நம்மோடு
இருக்கும் - நம் இனம் இருக்காது ...

கொஞ்சமும் உணர்வில்லாமல் பதற்றப்படாமல்
எப்படி இதை நம்மால் பார்க்க முடிகிறது ...?
என் ஜனநாயக நாட்டில் இதற்காக பேசத்தான் முடியாது,
கோபப்படதான் கையாலாகாது.
வருத்தபடவோ அழவோ கூட இயலாதா ??இயலாது இயலாது ..... மறத்தமிழன்...
வீரத்தை வெள்ளையனுக்கும் கற்றுதந்த தமிழன் எப்படி அழுவான் ??..

நம் தந்தையின் நெஞ்சில் குண்டுகள் பாயும்போதும் ,
தாயின் உடலில் தீ பரவும்போதும்,
சகோதரனின் உறுப்புக்கள் வெட்டப்படும்போதும்,
தங்கைகள் கற்பழிக்கப்படும்போதும்,
குழந்தைகளை திசைக்கு ஒன்றாக பிய்த்து எறியும்போதும்,
கொதிக்கும் 'தார்'ல் எறியும்போதும்
இப்படிதான் பார்த்துக்கொண்டு இருப்போமா ??


என்னையே நான் கேட்டுகொள்கிறேன்
"மானத்தமிழனே.. மானத்தமிழனே... நீ இப்போது ஈனத்தமிழனே" என்று...

இலங்கை ராணுவத்தை நியாயப்படுத்தும், கணவான்களே,
புத்தர்களே....
இந்திய தலைவர்களின் உயிர்தான் உயிர்
மற்றவன் உயிர் எல்லாம் மயிர் என்று சொல்லும் மகாத்மாக்களே ...
"தமிழன்" என்பதை மறந்துவிட்டு "மனிதன்" என்ற
குறைந்தபட்ச தகுதியையாவது தந்து
நெஞ்சில் "கை" வைத்து சொல்லுங்கள்
அங்கே நடப்பதெல்லாம் சரிதானா ???
"சரி" என்று நீங்கள் சொன்னால் உங்கள்

ரத்தத்தை பரிசோதித்து கொள்ளுங்கள் !!!
அது ரத்தமாக இல்லாமல் இருக்ககூடும் !!!

"என்னை கடலிலே தூக்கி போட்டாலும்
கட்டுமரமாக தமிழர்களை காப்பேன் "
ஆகா!!
என்ன அற்புதம் !!
மீன் பிடிக்கசென்று குண்டடிபட்டு கடல்
நீரில் துடிதுடித்து இறந்து 'கட்டைமரமாய்'
தினம் தினம் மிதக்கும் தமிழர்களில் இந்த
'கட்டுமரம்' எத்தனைபேரை காப்பாற்றிஇருக்கிறது தெரியுமா ??

"தமிழன் என்று சொல்லடா
தலைநிமிர்ந்து நில்லடா" என்பது எனக்கு மட்டும்தானா ??
அவர்கள் பேசுவது தமிழ் என்றால்
அவர்களும் தமிழர்கள்தானே ??
அவர்கள் மட்டும்
" தமிழன் என்று சொல்லடா
தன்மானம் இழந்து சாவடா" என்று சொல்லி
பரதேசியாய் வாழ்வதா ??


இந்த தமிழ் மண்ணில்,
சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களும்,
கட்டபொம்முவும், மருது வீரர்களும் ஆண்ட மண்ணில்,
வள்ளுவனும், கம்பனும், பாரதியும் வாழ்ந்த மண்ணில்,
பெரியாரும், அண்ணாவும், காமராஜரும், ஜீவாவும்
நெறிபடுத்திய இம்மண்ணில்தான்
நானும் பிறந்துவிட்டேன் என்று
கர்வத்தோடு தலைநிமிர்ந்துதான் நின்றேன்..

என்குலம் என் முன்னாலேயே
அழிவது கண்டு எதுவும் இயலாமல் நிற்கையில்
குனிந்ததலை நிமிரவே இல்லை...

இந்த தன்மான தலைவர்களில் ஒருவர்
இன்று இருந்தால் கூட இதைபார்த்துகொண்டு இருப்பார்களா ?
டெல்லி நாற்காலியின் முன்னால் விழுந்து கிடந்திருப்பார்களா ??
டெல்லில் இருந்து ஈழத்தமிழர்களை நோக்கி திரும்பிய
துப்பாக்கிகள் - எங்கள்
தமிழகதமிழர்களை நோக்கி திரும்ப அதிக காலமாகாது - என்று
தெரிந்தும்கூட
"நாங்களும் உன் குழந்தைகள்தான்" என்று கூறி
"பாசமிகு" பாரதமாதாவின் மடியில்
நம்பிக்கையுடன் தலை சாய்கிறோம்..
எந்த மானிலத்தில் இழவு என்றாலும்
"அடடா ..." என்று பரிதாபப்படும் தமிழன்தான்
முன்னால்நின்று அனைத்தும் செய்கிறான்.
குஜராத் பூகம்ப நிவாரண உதவியே சான்று.
இன்று வீடெல்லாம் பிணமாய்,
என் தமிழினமே துடிக்கிறதே
எந்த மானிலத்தில் இதற்கான குரல் ஒலிக்கிறது ??

குண்டு வைத்தவனையெல்லாம் மரியாதையாக
நடத்தும் மனிதாபிமான செம்மல்கள்,
"இந்தியாதான் எல்லாமே" என்று எண்ணிக்கொண்டு,
தன் மொழிக்காக, அடையாளத்திற்காக,
சுயமரியாதைக்காக, தன்மானத்துடன் போராடும்
வர்க்கத்தை "தீவிரவாதிகள்" என்பதா ???...
அட தமிழா.. தமிழா...
எப்போதோ விடிந்துவிட்டது
இன்னுமா தூங்குகிறாய், எழுந்திரு !!!...
உன்னை பந்தியிலேயே அமரவேண்டாம் என்றாலும்
நீயோ "என் இழை சரியில்லை" என்கிறாய்....!

ஓ .... இந்தியத்தாயே.... இந்தியத்தாயே..
பிறந்தது தமிழ்மண் என்றாலும்,
பேசுவது என் 'உயிர்தமிழ்' என்றாலும்
நாங்களும் கூட இந்தியர்கள்தான்....
கேட்கிறதா, இல்லை உன் மொழியில் சொன்னால்தான் கேட்குமா ??
நாங்களும் கூட இந்தியர்கள்தான்....

நன்றி

====சத்திவேல் லோகநாதன் ====