நாங்களும் இந்தியர்கள்தான் .....
நான் நன்றாக இருக்கிறேன், என்னகென்ன குறை ?!!!...
என் சகோதரர்கள் வெட்டப்படும்,
சகோதரிகள் கற்பழிக்கப்பட்டும், என் தமிழ்
குழந்தைகள் தலையையும் கைகளையும்
கால்களையும் தொலைத்துவிட்டு
சிதறிகிடப்பதை கண்டும் கூட செயலையோ
குரலையோ உயர்த்தும் என்
உரிமைகள் பரிக்கப்படாலும் - நான்
நன்றாகவே இருக்கிறேன், என்னகென்ன குறை ?
நரிகள் ஆண்டாலும், பாம்புகள் ஆண்டாலும்
நானும் என் பெற்றோரும் இங்கு
பாதுகாப்பாகவே இருக்கிறோம்
பின்னே !!
என் பாதுகாபிற்காக என்னை இன்றுவரை
சந்தித்திராத, என்னோடு பிறக்காத என்
சகோதரர்கள்தானே தன்னை பலியிட்டு
என்னை காத்து வருகிறார்கள் !!
வேறு எந்த நாடும் இலங்கையில் கால் வைக்க
கூடாது என்பதற்காக "சின்ன வீடு" இலங்கையை,
என் தேசம் வெட்கத்தை விட்டு எப்போதும் "தாஜா"
செய்யட்டும் - அதற்கு என் தமிழ் ரத்தம்தான் தரையெல்லாம்
பாய வேண்டுமா ??...
நாம் எதற்கும் கவலைப்பட வேண்டாம் ...
தினமும் 1 மணிநேரம் கடற்கரையில் ஓடினால்
100 வயது வரை வாழலாமாம் !!!...
அவர்கள் ஒரு நாள், ஒரே ஒருநாள்
சுதந்திரமாக வாழ்ந்துவிட வேண்டும் என்று
கழுத்தில் விஷத்தோடு கல்லிலும் முள்ளிலும்
ஓடுகிறார்களே அதைபோல !!!!...
யார் சொன்னது என் கடமைகள் எனக்கு தெரியாது என்று ??
"தமிழே, தாயகமே" என்று யார் முழங்கினாலும் கொடிபிடிக்கிறேனே
அது என் ஜனநாயக கடமை இல்லையா ?
இரவு எத்தனை மணி ஆனாலும் IPL ஆட்டத்தை பார்த்துவிட்டுதான்
மறுவேலை இது என் தேசிய உணர்வு இல்லையா ??
திரையில் தோன்றும் கூத்தாடிகளுக்கு
மாலை மரியதையோடு பாலாபிஷேகம்
செய்வோம் அது எங்கள் பக்தி பரவச உணர்வு இல்லையா ??
அரைகுறை ஆடை 'நிர்வாண கூத்தாடிகளான'
நடிகைகளுக்கு நாங்கள் கட்டாத கோவில்களா ??
இதைவிட வேறு என்ன பொறுப்புகளை நாங்கள் செய்யவேண்டும்
என்று நினைகிறீர்கள் ??
இதுகளும் இதுகளின் மன்றங்களும் என்
தமிழனுக்கு செய்யாத தொண்டா ??? !!!
என்னிடம் 'டிக்கெட்' பிட்சைஎடுக்கும் நடிகனையும்
ஓட்டு பிட்சைஎடுக்கும் தலைவரையும் நான்
உயிரினும் மேலாக கருதுகிறேன்...
பின்னே !!
என் இனம் தினம் தினம் சிதறி அழிவது கண்டு
தாளமுடியாமல், உறங்கமுடியாமல் பல
மாதங்களாக உயிர் வாழ்கிறார்கள் !!
உலகிலேயே கேட்பாரற்று மிக மிக மலிவாக
கிடைப்பது தமிழனின் உயிர்தான் ... !!!
"முன் தோன்றிய மூத்தகுடிமகன்" என்று சொல்லிகொண்டாலும்
நடத்தப்படுவது என்னவோ "மூத்தகுடி-மகன்" போலதான் ....
தமிழ் தூண்களின் திறமையும் திட்டமிடலும்
'மானாட மயிலாடவில்' தெரிகிறது ..
' ஸ்பெக்ட்ரத்தில்' கலர் கலராய் தெரிகிறது
தமிழனை காப்பாற்ற நாற்பதும் பேரும்
என்னமாய் உழைக்கிறார்கள் !!...
முதலில் எல்லோருக்கும் டிவி தருவதுதான் நல்லது !!
அப்போதுதான் என் இனம், என் குழந்தைகள் தினமும்
ரத்தம் தெறித்து சாவதை பார்த்து ரசிக்கலாம் ...பங்குசந்தையையும்,
அமெரிக்க பொருளாதாரத்தையும்,
மென்பொருள் ஏற்ற இரக்கத்தையும்,
IPL ஆட்டத்தையும்,
அற்புத நடிகர்களையும்,
அரைநிர்வாண நடிகைகளையும் உற்று கவணிக்கலாம்
ஒரு காலத்தில் இவை மட்டும்தான் நம்மோடு
இருக்கும் - நம் இனம் இருக்காது ...
கொஞ்சமும் உணர்வில்லாமல் பதற்றப்படாமல்
எப்படி இதை நம்மால் பார்க்க முடிகிறது ...?
என் ஜனநாயக நாட்டில் இதற்காக பேசத்தான் முடியாது,
கோபப்படதான் கையாலாகாது.
வருத்தபடவோ அழவோ கூட இயலாதா ??இயலாது இயலாது ..... மறத்தமிழன்...
வீரத்தை வெள்ளையனுக்கும் கற்றுதந்த தமிழன் எப்படி அழுவான் ??..
நம் தந்தையின் நெஞ்சில் குண்டுகள் பாயும்போதும் ,
தாயின் உடலில் தீ பரவும்போதும்,
சகோதரனின் உறுப்புக்கள் வெட்டப்படும்போதும்,
தங்கைகள் கற்பழிக்கப்படும்போதும்,
குழந்தைகளை திசைக்கு ஒன்றாக பிய்த்து எறியும்போதும்,
கொதிக்கும் 'தார்'ல் எறியும்போதும்
இப்படிதான் பார்த்துக்கொண்டு இருப்போமா ??
என்னையே நான் கேட்டுகொள்கிறேன்
"மானத்தமிழனே.. மானத்தமிழனே... நீ இப்போது ஈனத்தமிழனே" என்று...
இலங்கை ராணுவத்தை நியாயப்படுத்தும், கணவான்களே,
புத்தர்களே....
இந்திய தலைவர்களின் உயிர்தான் உயிர்
மற்றவன் உயிர் எல்லாம் மயிர் என்று சொல்லும் மகாத்மாக்களே ...
"தமிழன்" என்பதை மறந்துவிட்டு "மனிதன்" என்ற
குறைந்தபட்ச தகுதியையாவது தந்து
நெஞ்சில் "கை" வைத்து சொல்லுங்கள்
அங்கே நடப்பதெல்லாம் சரிதானா ???
"சரி" என்று நீங்கள் சொன்னால் உங்கள்
ரத்தத்தை பரிசோதித்து கொள்ளுங்கள் !!!
அது ரத்தமாக இல்லாமல் இருக்ககூடும் !!!
"என்னை கடலிலே தூக்கி போட்டாலும்
கட்டுமரமாக தமிழர்களை காப்பேன் "
ஆகா!!
என்ன அற்புதம் !!
மீன் பிடிக்கசென்று குண்டடிபட்டு கடல்
நீரில் துடிதுடித்து இறந்து 'கட்டைமரமாய்'
தினம் தினம் மிதக்கும் தமிழர்களில் இந்த
'கட்டுமரம்' எத்தனைபேரை காப்பாற்றிஇருக்கிறது தெரியுமா ??
"தமிழன் என்று சொல்லடா
தலைநிமிர்ந்து நில்லடா" என்பது எனக்கு மட்டும்தானா ??
அவர்கள் பேசுவது தமிழ் என்றால்
அவர்களும் தமிழர்கள்தானே ??
அவர்கள் மட்டும்
" தமிழன் என்று சொல்லடா
தன்மானம் இழந்து சாவடா" என்று சொல்லி
பரதேசியாய் வாழ்வதா ??
இந்த தமிழ் மண்ணில்,
சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களும்,
கட்டபொம்முவும், மருது வீரர்களும் ஆண்ட மண்ணில்,
வள்ளுவனும், கம்பனும், பாரதியும் வாழ்ந்த மண்ணில்,
பெரியாரும், அண்ணாவும், காமராஜரும், ஜீவாவும்
நெறிபடுத்திய இம்மண்ணில்தான்
நானும் பிறந்துவிட்டேன் என்று
கர்வத்தோடு தலைநிமிர்ந்துதான் நின்றேன்..
என்குலம் என் முன்னாலேயே
அழிவது கண்டு எதுவும் இயலாமல் நிற்கையில்
குனிந்ததலை நிமிரவே இல்லை...
இந்த தன்மான தலைவர்களில் ஒருவர்
இன்று இருந்தால் கூட இதைபார்த்துகொண்டு இருப்பார்களா ?
டெல்லி நாற்காலியின் முன்னால் விழுந்து கிடந்திருப்பார்களா ??
டெல்லில் இருந்து ஈழத்தமிழர்களை நோக்கி திரும்பிய
துப்பாக்கிகள் - எங்கள்
தமிழகதமிழர்களை நோக்கி திரும்ப அதிக காலமாகாது - என்று
தெரிந்தும்கூட
"நாங்களும் உன் குழந்தைகள்தான்" என்று கூறி
"பாசமிகு" பாரதமாதாவின் மடியில்
நம்பிக்கையுடன் தலை சாய்கிறோம்..
எந்த மானிலத்தில் இழவு என்றாலும்
"அடடா ..." என்று பரிதாபப்படும் தமிழன்தான்
முன்னால்நின்று அனைத்தும் செய்கிறான்.
குஜராத் பூகம்ப நிவாரண உதவியே சான்று.
இன்று வீடெல்லாம் பிணமாய்,
என் தமிழினமே துடிக்கிறதே
எந்த மானிலத்தில் இதற்கான குரல் ஒலிக்கிறது ??
குண்டு வைத்தவனையெல்லாம் மரியாதையாக
நடத்தும் மனிதாபிமான செம்மல்கள்,
"இந்தியாதான் எல்லாமே" என்று எண்ணிக்கொண்டு,
தன் மொழிக்காக, அடையாளத்திற்காக,
சுயமரியாதைக்காக, தன்மானத்துடன் போராடும்
வர்க்கத்தை "தீவிரவாதிகள்" என்பதா ???...
அட தமிழா.. தமிழா...
எப்போதோ விடிந்துவிட்டது
இன்னுமா தூங்குகிறாய், எழுந்திரு !!!...
உன்னை பந்தியிலேயே அமரவேண்டாம் என்றாலும்
நீயோ "என் இழை சரியில்லை" என்கிறாய்....!
ஓ .... இந்தியத்தாயே.... இந்தியத்தாயே..
பிறந்தது தமிழ்மண் என்றாலும்,
பேசுவது என் 'உயிர்தமிழ்' என்றாலும்
நாங்களும் கூட இந்தியர்கள்தான்....
கேட்கிறதா, இல்லை உன் மொழியில் சொன்னால்தான் கேட்குமா ??
நாங்களும் கூட இந்தியர்கள்தான்....
நன்றி
====சத்திவேல் லோகநாதன் ====
Friday, May 8, 2009
நாங்களும் இந்தியர்கள்தான்....
Posted by BHARATHAMAINTHAN at 10:28 PM
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment