Sunday, October 4, 2009

டெல்லியை கைப்பற்றுமா சீனா.?

டெல்லியை கைப்பற்ற தங்களுக்கு இரண்டு நாங்கள் தான் ஆகும் என சீன வெப்சைட் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அருணாச்சல பிரதேசத்தில் இருக்கும் இந்திய சுற்றுலா நிறுவனங்களுக்கும் இமெயிலை அனுப்பியுள்ளது அந்த தளம்.சீனா கடந்த 1ம் தேதி தனது 60வது தேசிய தினத்தை கொண்டாடியது. அப்போது தனது ராணுவ பலத்தையும், தங்களது வளர்ச்சியையும் உலகிற்கு காட்டியது.ஆனால், அதே நேரத்தில் இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசம் தங்களுக்கு சொந்தமானது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனால் அந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு விசா கொடுப்பதில்லை. மேலும், ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் உலக வங்கிகள் அருணாசல பிரதேசத்துக்கு நிதி உதவி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.மேலும், இந்தியாவுடனான எல்லைக்கோடான மெக் மோகன் கோட்டை தாண்டி பல முறை அத்துமீறல் செய்து வருகிறது.இதையடுத்து தற்போது இந்தியா, சீனா எல்லை பகுதி பதற்றம் நிறைந்தவையாக மாறியுள்ளது. இந்நிலையில் தற்போது அருணாச்சல பிரேதசத்தில் இருக்கும் சுற்றுலா நிறுவனங்களுக்கு சில மிரட்டல் இமெயில் வந்துள்ளது. அதில் சில வரைபடங்கள் இணைக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றில் அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி என குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றொன்றில் டெல்லி மீது ஒரு வட்டம் போடப்பட்டுள்ளது. அதன் அருகே இந்த இடத்தை சீன ராணுவம் பிடிக்க இரண்டு நாட்கள் தான் தேவைப்படும் என கூறப்பட்டுள்ளது. இவை இரண்டும் ஒரு சீன இணையதளத்தில் இருந்து தான் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து ஹிமாலயன் ஹாலிடேஸ் என்ற நிறுவனத்தின் தலைவர் டேரிங் வாங்கே கூறுகையில்,அருணாச்சல பிரதேசத்தில் இருக்கும் சுற்றுலா நிறுவனங்கள் அனைத்துக்கும் இது போன்ற மிரட்டல் இமெயில் வருகிறது. எங்களுக்கு சில இமெயில்கள் வந்துள்ளது. இது அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி என குறிப்பிடப்பட்டுள்ளது. இது எங்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.இந்த விஷயத்தை மத்திய அரசு சாதாரணமாக எடுத்து கொள்ள கூடாது. இதன்மூலம் அருணாச்சலம் இந்தியா வின் ஒரு பகுதி என்பதை உறுதியாக தெரிவிக்க வேண்டும். அங்கு கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

Wednesday, July 22, 2009

யுரேனியம்-கருவிகள்: அமெரிக்காவிடம் சரணடைந்த இந்தியா?

டெல்லி: இந்திய அணு உலைகளுக்குத் தரப்படும் எரிபொருள், அதை செரிவூட்ட பயன்படும் கருவிகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்ய அமெரிக்காவுக்கு அதிகாரம் வழங்கும் ஒப்பந்தத்தில் (End-Use Monitoring Agreement-EUMA) இந்தியா ரகசியமாக கையெழுத்திட்டுள்ளது.

அதாவது இந்திய அணு உலைகளுக்குத் தரப்படு்ம் யுரேனியத்தை நாம் மீண்டும் செரிவூட்டி அணு ஆயுதம் தயாரிக்க பயன்படுத்துகிறோமா என்பது அமெரிக்க அதிகாரிகள் வந்து சோதனையிட முடியும்.

இன்னும் தெளிவாகச் சொன்னால் அமெரிக்கா தந்த கருவிகளும் எரிபொருளும் அணு உலைகள் தவிர வேறு எதற்கும் (அணு ஆயுதம் தயாரிக்க) பயன்படுத்தப்பட்டுவிடாமல் இந்த ஒப்பந்தம் தடுக்கும்.

சமீபத்தில் இந்தியா வந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரியும் நமது வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும் இதில் கையெழுத்துப் போட்டுவிட்டு அதைப் பற்றி ஹிலாரி டெல்லியை விட்டுக் கிளம்பும் வரை மறைத்துவிட்டது மத்திய அரசு.

மத்திய அரசின் இந்தச் செயலுக்கு மக்களவையிலும் மாநிலங்களவையிலும் கடும் கண்டனம் தெரிவித்த பாஜக, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க் கட்சியினர் வெளிநடப்பு செய்து தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர்.

இந்த ஒப்பந்த்தின் மூலம் இந்தியாவி்ன் பாதுகாப்பையே மத்திய அரசு அடமானம் வைத்துவிட்டதாக பாஜக தலைவர் அத்வானியும் இடதுசாரிக் கட்சி எம்பி்க்களும் மத்திய அரசை சாடினர்.

இந்த ஒப்பந்தம் மூலம் அமெரிக்காவுக்கு மட்டுமல்ல நமது அணு உலைகளுக்கு எரிபொருள், கருவிகள் சப்ளை செய்யும் அனைத்து நாடுகளும் நமது அணு ஆயுதங்களை பார்வையிட மத்திய அரசு வகை செய்துவிட்டது, அமெரிக்காவி்ன் நிர்பந்தத்துக்கு பணிந்துவிட்டது என்று எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டின.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மறுத்தார். EUMA ஒப்பந்தம் மூலம் யாரும் நம்மை வந்து கண்காணிக்க முடியாது என்றும், அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க செய்து கொள்ளப்பட்ட ஒரு இடைக்கால ஏற்பாடு தான் இந்த ஒப்பந்தம் என்றும் கூறினார் கிருஷ்ணா.

இந்த ஒப்பந்தத்தை அப்படியே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறிய பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்கா, அமெரிக்காவுக்கு அடிபணிவது இந்த அரசி்ன் வழக்கமாவிட்டது என்றார்.

ராஷ்டிரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறுகையி்ல், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் நிலையில், அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விஷயத்தை அரசு மறைக்க முயற்சிக்கிறது. அமெரிக்காவுடன் கைகோர்க்கும் முன் இராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்கு ஏற்பட்ட நிலையை நினைத்துப் பார்க்க வேண்டும். அமெரிக்காவின் உத்தரவுக்கு இணங்க மறுத்தால், சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான் மற்றவர்களுக்கும் ஏற்படும் என்றார்.

எதிர்க்கட்சிகளுக்கு திமுக ஆதரவு..

மக்களவையில் இந்தப் பிரச்சனையை எதிர்க்கட்சிகள் கவலை தெரிவித்து பேசியபோது காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுகவும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தது.

அதே போல மாநிலங்களவையிலும் எதிர்க் கட்சியினருக்கு திமுக ஆதரவாகப் பேசியதால் காங்கிரசார் எரிச்சாயினர்.

கேபினட் கூட்டம் ஒத்திவைப்பு...

இந் நிலையில் நேற்று நடக்கவிருந்த மத்திய கேபினட் கூட்டம் காரணம் ஏதும் தெரிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுவிட்டது. கூட்டணிக் கட்சிகளே கோபத்தில் இருப்பதால் இக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாகத் தெரிகிறது

அமெரிக்கா மகிழ்ச்சி..

இதற்கிடையே இந்தியா-அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேலும் பலப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை உருவாக்கித் தந்துள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தம் குறித்த தனது முதல் அறிக்கையை அதிபர் ஒபாமா, அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இது குறித்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் பெஞ்சமின் கூறுகையில்,

இந்த ஒப்பந்தம், இரு நாடுகளின் உறவு மேலும் பலப்படுவதற்கான புதிய வழிமுறைகளை ஏற்படுத்தித் தந்துள்ளது. எரிபொருள் சப்ளை, அணு ஆயுத பரவல் தடுப்பு உள்ளிட்ட விஷயங்களில் இந்தியாவுடன் இணைந்து செயல்பட அமெரிக்கா விரும்புகிறது என்றார்.

Tuesday, July 21, 2009

இனி செல்வராஜா பத்மநாதனே வழி நடத்துவார்-விடுதலைப் புலிகள்

வன்னி: பிரபாகரனால், விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட செல்வராஜா பத்மநாதன் இனி வரும் காலத்தில், ஏற்ப புலிகள் அமைப்பின் போராட்டத்தை வழி நடத்திச் செல்வார் என விடுதலைப் புலிகள் அமைப்பு கூறியுள்ளது.

இதன் மூலம் புலிகள் அமைப்பின் புதிய தலைவராக செல்வராஜா பத்மநாதன் அதிகாரப்பூர்வமாக உருவெடுத்துள்ளார்.

இதுதொடர்பாக விடுதலைப் புலிகளின் நிறைவேற்றுச் செயற்குகுழு என்ற பெயரில் சுரேஸ் (அமுதன்), ராம் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை..

எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழ் மக்களே, எமது தமிழீழ தேசத்தின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் நெருக்கடி மிகுந்த, துயர் படிந்த கால கட்டம் ஒன்றினுள் ஈழத் தமிழினம் இப்போது நிலை குலைந்து நிற்கின்றது.

ஈடு செய்ய முடியாத- கனவில் கூட நாம் ஏற்றுக்கொள்ள விரும்பாத- மிகப் பெரிய இழப்புக்களை, எம்மினம் சந்தித்து விட்டது என்பது மறுக்க முடியாத உண்மை.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழித்து விட்டதாகவும், முற்றாக ஒடுக்கிவிட்டதாகவும், இலங்கை நாடு பரப்புரை செய்து கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில்- தமிழீழ விடுதலைக்காக வீறுகொண்டு எழுந்து போராட வேண்டிய வரலாற்றுக் கடமை- எங்கள் தேசியத் தலைவர் அவர்களினாலும், எங்கள் மண்ணிற்காக விதையாகிப் போன மாவீரர்களினாலும், தமது உயிர்களைத் தந்து விட்ட மக்களினாலும் எங்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய நிலையில்- வரலாற்றின் தேவை கருதி, பிறந்திருக்கும் புதிய சூழலுக்கு ஏற்ப, புதிய வழிமுறைகளுக்கு ஊடாகப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிர்வாகக் கட்டமைப்பை மீள்-ஒழுங்கமைப்புச் செய்துள்ளோம் என்பதை மக்களுக்கு எமது இயக்கம் பணிவோடு அறியத்தருகின்றது.

போராட்ட வடிவங்களும் அதற்கான உத்திகளும், பாதைகளும் காலத்திற்கேற்பவும் தேவைக்கேற்பவும் மாற்றமடையலாம். எமது இறுதி லட்சியமான தமிழீழம் என்றும் மாறாதது. எனவே தமிழீழ விடுதலைப் புலிகளாகிய நாங்கள் மக்களுடன் ஒன்றிணைந்து விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வை மேற்கொள்ள வேண்டிய தருணத்தில் இருக்கின்றோம்.

அன்றும் இன்றும் இனி என்றும் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களே தமிழ் தேசியத்தின் தலைவர். எங்கள் முன்னாலுள்ள தடைகளை உடைத்தெறிந்து எங்கள் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள எமது ஒருங்கிணைப்பாளர்கள், தாயகத்தின் களத்தில் இருந்து எதிரியின் முற்றுகையை உடைத்துக் கொண்டு வெளிவந்த போராளிகள், பொறுப்பாளர்கள் என எங்கள் உறுப்பினர்கள் பலரையும் ஒருங்கிணைத்து மேற்கொள்ளப்பட்ட, நீண்ட, விரிவான, ஆழமான கருத்துப் பரிமாற்றங்களின் விளைவாக இறுதியான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்தக் கூட்டு முடிவுக்கு ஏற்ப பிரபாகரன் அவர்களால் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த செல்வராஜா பத்மநாதன் இனிவரும் காலத்தில் எங்கள் போராட்ட நகர்வுளை வழிநடத்திச் செல்வார் என்பதை மக்களுக்கும், உலக சமூகத்திற்கும் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கிறோம்.

போராட்டத்தை முனைப்புடன் முன்னகர்த்தும் நோக்கில் இயக்கத்திற்கான ஒரு தலைமைச் செயலகமும், பல்வேறு துறைசார் வேலைத் திட்டப் பிரிவுகளும், நிறைவேற்றுச் செயற்குழுவும் உருவாக்கப்பட்டுள்ளன.

இவை பற்றிய விபரங்களை விரைவில் தெரிவிப்போம். எங்கள் எதிர்கால செயற்பாடுகளை வலுப்படுத்தும் முகமாக தமிழ் மக்களாகிய உங்களின் மலையாய ஆதரவையும் அறிவார்ந்த கருத்துக்களையும் எதிர்பார்த்து நிற்கின்றோம்.

தமிழ் மக்களுடைய நிலங்களை ஆக்கிரமித்ததாலும் பல்லாயிரம் தமிழ் மக்களைக் கொன்று குவித்ததாலும் தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்டம் தோற்று விட்டதென்று சிங்கள தேசமும் அதனுடன் கூட்டுச் சேர்ந்த நாடுகளும் நினைக்குமாயின் அந்த மாயையை நாம் உடைத்தெறிவோம்.

பிரபாகரன் வளர்த்துவிட்ட விடுதலைத் தாகம் என்ற பெருநெருப்பு, உணர்வுளள் ஒவ்வொரு தமிழர்களின் நெஞ்சிலும் கனன்று கொண்டிருப்பதையும் தேச விடுதலை ஒன்று மட்டுமே அந்தப் பெருநெருப்பை அணைக்கும் சக்தியுள்ளது என்ற உண்மையையும் எங்கள் அடுத்தகட்ட போராட்ட நகர்வுகளின் மூலமாக உலகிற்கு உணர வைப்போம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Thursday, July 2, 2009

பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா?

பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இதுதான் உலகெங்கும் வாழும் தமிழர்களிடையே உலாவரும் மில்லியன் டாலர் கேள்வி. பத்து நாட்களுக்கு முன் நார்வே நாட்டில் உள்ள தமிழர்கள், பட்டாசு வெடித்து மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் திளைத்துள்ளனர். காரணம், நார்வே நாட்டில் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் என்ற செய்தி வெளியானது தான். புலித் தலைவர்களிடம் நெருக்கமாக இருந்த சிலரிடம் கேட்டபோது,


“இந்தோனேசியாவில் உள்ள ஆயிரக்கணக்கான தீவுகளில் மக்கள் அதிகமாகப் புழங்கும் பெரும் தீவுகள் 26 மட்டும்-தான். சில குட்டி, குட்டித் தீவுகளில் தீவிரவாத அமைப்புகள்

காலூன்றி உள்ளன. அவர்களிடம் நல்ல நட்புறவில் இருந்த பிரபாகரனும் அவரது நெருங்கிய சகாக்களும் அந்தத் தீவுகளில் ஒன்றில் பத்திரமாக இருக்கிறார்கள்” என்கிறார்கள்.
ஈழ ஆதரவாளர்கள் இதைவிட இன்னும் சற்று சந்தோஷிக்கும் விதமாக ஒரு செய்தி உலா வருகிறது, “இலங்கையிலிருந்து மிக எளிதில் தப்பிக்க வாய்ப்பு உள்ள ஒரே இடம் தமிழ்நாடுதான். எனவே, அதிராம்பட்டினம் கடற்கரை வழியாக வந்த பிரபாகரன், தற்போது திருச்சி மையப்பகுதியில் ரகசியமான இடத்தில் பாதுகாப்பாக இருக்கிறார்” என்ற செய்தியும் சமீப சில நாட்களாக உலா வரத் தொடங்கியிருக்கிறது.

“இல்லை, இல்லை மாசற்ற மாவீரன் பிரபாகரன் கோழையைப்போல் தப்பித்துச் செல்ல வாய்ப்பே இல்லை. லட்சக்கணக்கான தமிழ் ரத்த சொந்தங்களையும் ஆயிரக்-கணக்கான போராளிகளையும், மட்டுமல்ல தனது வீரமைந்தன் சார்லஸ் அந்தோணியையும் சிங்கள கொலைவெறிக்குப் பலி கொடுத்த பின்பு, தாய் மண்ணைவிட்டு வெளியேறும் பேச்சுக்கே இடமில்லை. இன்னமும் வன்னிகாட்டில் மக்களுடன் மக்களாக, மீண்டும் அவர்களை பாதுகாக்கும் உத்திகளுடன் பலத்த பாதுகாப்பு அரணுக்குள்தான் பிரபாகரன் இருக்கிறார்” என்றும் பேசுகிறார்கள்.

இச்சூழ்நிலையில் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? என்ற கேள்விக்கு விடைதேடி புறப்பட்டோம். விடுதலைப்-புலிகளுக்கும் தமிழ்நாட்டிற்கும் எப்போதுமே மிக நெருக்கமான தொடர்-புள்ள இடம் வேதா-ரண்யத்தை அடுத்த கோடியக்கரைதான்! பிரபாகரனும், மற்ற ஈழ விடுதலை அமைப்புகளும், ஆயுதப்பயிற்சி எடுத்துக் கொண்டதும் இங்குதான். மேலும் விடுதலைப்-புலிகளின் அதி நவீன விசைப்படகு இலங்கை-யிலிருந்து கோடியக்-கரைக்கு வந்து சேர வெறும் பன்னிரென்டு நிமிடங்கள்தான் ஆகும் என்பது ஆச்சர்ய-மான விஷயம். இத்தகைய அதிவேகப்-படகு இந்தியா, இலங்கை ராணுவத்திடம் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்ப காலத்தில் கள்ளக் கடத்தல் தொழிலாக இருந்து பிறகு, புலிகளுக்குத் தேவையான பொருள்களை சப்ளை செய்யும் தொழிலாக மாறி, அதனை செய்தவர்கள் வசிக்கும் பகுதியும், கோடியக்கரைதான். அத்தகைய தொழிலில் இருந்தவரும், இன்று-வரை புலிகளின் அசைவை அறிந்தவருமான முக்கியப் புள்ளி ஒருவரைச் சந்தித்தோம். அவரிடம் நாம் பேசியபோது, ‘நான் அறிந்த வரையில் தம்பி பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். அவரைத் தெரிந்தோ, தெரியாமலோ இலங்கை அரசு இறந்ததாக அறிவித்து ஓர் உடலையும் காட்டி நாடகத்தை முடித்துவிட்டது.

ஆங்கிலேயரை எதிர்த்து இந்திய விடுதலைக்கு ஆயுதம் ஏந்தி போராடிய நேதாஜியைப்போல, இலங்கையின் இனவெறியை எதிர்த்து தமிழ் மக்களின் விடுதலைக்குப் போராடிய உண்மையான போராளியை சர்வதேச அளவில் கோழை மரணமாகச் சித்திரித்து அவமானப்படுத்தி-விட்டார்கள்.

இதுவும் போர்த் தந்திரத்தில் தம்பிக்கு நல்லதாகவே அமைந்துவிட்டது. படைகளை கலைத்து, ஆயுதங்களை மறைத்து மக்களுடன் மக்களாக புலிகள் இருக்கிறார்கள் அவர்களை அடையாளம் கண்டு அழிக்கிறோம் என்ற போர்வையில் அப்பாவிகளை கொன்று குவிக்கிறார்கள் இலங்கை ராணுவத்தினர்.

தமிழகத்தில் ஒரு பழக்கம் இன்னும் கிராமங்களில் உண்டு. அதாவது மரணப்படுக்கையில் உள்ளவர்களுக்கு ‘உயிர் பால்’ ஊட்டுவார்கள். அதுபோல், இலங்கைத் தமிழர்களை கொல்ல எல்லாவித உதவிகளையும் செய்துவிட்டு, இன்று அவர்களுக்கு நிவாரணம் என்ற பெயரில் ‘உயிர் பால்’ ஊட்ட முயற்சி செய்கிறது இந்திய அரசு. அதனை ‘வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்’ என்று மேடைக்கு மேடை முழங்கிய தமிழக தலைவர்களும் வேடிக்கை பார்ப்பதுதான் வெட்கக்கேடாக இருக்கிறது.

தமிழன் எரிவதையும், காடு அழிவதையும் காட்டுகின்ற இலங்கை ராணுவம், புலிகளின் நவீன ரக டாங்கிகளையோ, போர் விமானத்தையோ அல்லது பெருமளவில் ஆயுதங்களையோ காட்டவில்லை. ஏனென்றால் அவற்றை இன்னமும் அவர்களால் கைப்பற்ற முடியவில்லை என்பதுதான் உண்மை. உடைமைகள், உறவுகள், உறுப்புகள் என சகலத்தையும் இழந்து கையேந்தி வாழும் அவலத்திற்கு வந்துவிட்ட எஞ்சியிருக்கும் இலங்கைத் தமிழனுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவிகள் வந்து சேரட்டும் என்பதற்காகவே, தம்பி தலைமறைவில் இருக்கிறார் என்றே எனக்குக் கிட்டும் செய்திகள் சொல்லுகின்றன” என்று கண்கள் மின்னச் சொல்கிறார் அந்தப் புள்ளி.

அடுத்து ஆறுகாட்டுத்துறை மீனவக் கிராம நாட்டாரான சேதுபதியைச் சந்தித்துப் பேசினோம். இவர் இலங்கைத் தமிழர்கள் பலரிடமும் நல்ல தொடர்பில் இருப்பவர். உணர்வுபூர்வமாகவே பேச ஆரம்பித்தார்.

“சிங்களவன் வேறு யாருமல்ல, ஒரு காலத்தில் நம் நாட்டில் உள்ள மேற்கு வங்களாத்திலிருந்து சென்றவர்கள்தான். அந்த இன உணர்வில், அதே மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பிரணாப் முகர்ஜி வெளியுறவுத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்புதான், தலைமைக்குப் புலிகளைப் பற்றிய தவறான தகவலை தந்து, புலிகளை அழிப்பதாக எண்ணி, அப்பாவித் தமிழர்களை அழித்து-விட்டார்கள். போரில் வீரமரணம் அடைவது இயற்கைதான். அந்த வகையில் சார்லஸ் அந்தோணி, புலித்தேவன், நடேசன், குணா போன்றோர் இறந்திருக்கிறார்கள். ஆனால் பொட்டு அம்மான், சூசை போன்ற முக்கியத் தளபதிகளுடன் பிரபாகரன் நலமுடன், பாதுகாப்பாக இருக்கிறார் என்றே எனக்கு வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நாகையிலிருந்து கன்னியாகுமரி வரை மீனவக் கிராமங்களில் பிரபாகரன்தான் அவர்களின் மனம் நிறைந்த தலைவர். அவர் இறந்திருப்பது உண்மையென்றால் எங்காவது ஓரிடத்திலாவது ஒரு படம் வைத்து மாலை போட்டு அஞ்சலி செலுத்தியிருக்க மாட்டார்களா? இலங்கை ராணுவத்தால் அப்பாவி இலங்கைத் தமிழர்கள் மட்டுமல்ல, தமிழக மீனவர்கள் நானூறுக்கும் மேற்பட்டோர் பலியாகி, அவர்களது குடும்பங்கள் கண்ணீரில் மிதக்கின்றன. இந்தியக் கப்பற் படையால் நமது மீனவர்களுக்கு எந்தப் பலனும் இல்லை. எனவே, விரைவில் இங்கு முகாமிட்டுள்ள நேவியை எதிர்த்து பெரிய அளவில் கண்டன பேரணி நடத்தப் போகிறோம்” என்று முடித்தார்.

இறுதியாக இலங்கையில் நாற்பதாண்டு காலம் வசித்தவரும், பிரபாகரனிடம் 1980லிருந்து நல்ல அறிமுகத்தில் உள்ளவருமான சீத்தாராமனிடம் தொடர்பு கொண்டு பேசினோம்.

“எம்.ஜி.ஆர். டைரியில் என் பெயர் இருக்கும். அதுபோல் தம்பி மனதில் எனக்கு இடமிருக்கும். பதினெட்டு வயது தம்பியாக பிரபாகரனை சந்தித்தேன். அப்போதே அதிகம் பேசமாட்டார். வார்த்தைகளை தேவைக்கேற்பவே பயன்படுத்துவார். ஒப்பற்ற, ஈடு இணையற்ற மாவீரன் பிரபாகரன். வீரனுக்கு எப்போதுமே அழிவில்லை என்பது வேறு விஷயம். இதற்கு முன்பு இரண்டுமுறை ‘பிரபாகரன் கொல்லப்பட்டார். உடல் வந்து கொண்டிருக்கிறது’ என்று அறிவித்தார்கள். நானும்கூட அதனை நம்பி, கண்ணீர்விட்டு, போட்டோவிற்கு மாலை போட்டு அஞ்சலியும் செலுத்தியிருக்கிறேன்.

ஆனால் அந்த மாவீரன் ஒவ்வொரு முறையும் மாவீரர் தினமான நவம்பர் 27-ம் தேதியன்று வெளிப்பட்டிருக்கிறார். அதுபோலவே இப்போதும் வருவார் என்றே உறுதியாக நம்புகிறேன். கடந்தவாரம் இலங்கை கவிஞர் காசி ஆனந்தனிடம் பேசினேன். தம்பி நலமாக இருக்கிறார் என்றே எனக்கும் எனது மனைவிக்கும் நல்ல செய்தியைச் சொன்னார். அதையே தான் உங்களுக்கும் சொல்கிறேன். நல்லதை நம்புங்களேன்” என்று முடித்த-போது, அவருடைய வயதை மீறிய உற்சாகத்தைக் காண முடிந்தது.


நன்றி - VIYAPPU.COM

Friday, May 22, 2009

உயிர்த்தெழுந்தார் பிரபாகரன் !!

டகங்களில்ஈழம் பற்றிய செய்திகள் தாறுமாறாக வெளியாகிக்கொண்டே இருந்தன. இந்தியாவில்தேர்தல் முடிவுகளை மக்கள் அறிந்துகொண்டிருந்த நேரம். மே 16-ந் தேதிசனிக்கிழமையன்று வன்னிக் காட்டில் பாரிய அளவிலான திட்டம் ஒன்றிற்குத்தயாராகியிருந்தனர் விடுதலைப் புலிகள்.

நெருங்கிவரும் சிங்கள ராணுவ வளையத்தை ஊடறுத்துத் தாக்கி, புலிகளின் முக்கியத்தலைவர்கள் வெளியேறுவது என்பதுதான் அந்தத் திட்டம். புலிகளுக்கேயுரிய போர்வியூகங்களின்படி நடந்த இந்த ஊடறுப்புத் தாக்குதலில் 100க்கும் அதிகமானசிங்கள ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில், பிரபாகரனின்சமகாலத் தலைவரான சொர்ணம் இந்தத் தாக்குதலில் ராணுவத்தினரால் கொல்லப்பட,புலிகளின் முயற்சி தோல்வியடைந்தது.

களத்தில்இழப்புகள் சகஜமானதுதான் என்பதைப் புலிகள் அறிவார்கள். ஆனால், தங்களின்இலட்சியமான தமிழீழத் தாயகம் அமைவதற்கு எதை இழக்கவேண்டும் எதைக் காப்பாற்றவேண்டும் என்பதிலும் அவர்கள் கவனமாக இருப்பார்கள். அதனால், மே 17-ந்தேதியன்று புலிகளின் மூத்த தளபதிகள் அனைவரும், தங்களுக்கு வழக்கமாகக்கட்டளையிடும் பிரபாகரனிடம், கோரிக்கை வடிவில் ஒரு கட்டளை பிறப்பித்தனர்என்கிறார்கள் தொடர்பில் உள்ள வட்டாரத்தினர்.

தமிழீழத்தேசியத் தலைவர் அவர்கள் இங்கிருந்து வெளியேற வேண்டிய தருணம் இது.ஏணென்டால், சிங்கள ராணுவம் தனது பாரிய படைகளோடு நெருங்கி விட்டது. இதுஇந்தப் போரின் இறுதிக்கட்டம். இதிலிருந்து தலைவர் அவர்கள் மீண்டால்தான்அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுக்க முடியும். நம்முடைய இலட்சியமானதமிழீழத்தை வென்றெடுக்க முடியும் என்று தளபதிகள் சொன்னதை பிரபாகரன்ஏற்றுக் கொள்ளவில்லையாம். நமது மண்ணின் விடுதலைக்காகத்தான் நான்போராடுகிறேன். அதனால் கடைசிவரை இந்த மண்ணில்தான் இருப்பேன் என பிரபாகரன்உறுதியான குரலில் கூற, தளபதிகள் அவரிடம் நீண்ட நேரம் வாதாடியுள்ளனர். இந்தமண்ணில் உங்கட மகன் நின்று போராடட்டும். எங்கட தலைவராகிய நீங்கள்பாதுகாப்பான இடத்துக்குப் போயாக வேண்டும். அப்போதுதான் இந்தப் போராட்டம்எழுச்சியோடு தொடரும் என்று தங்களுடைய கோரிக்கைக்கு அழுத்தம்கொடுத்திருக்கிறார்கள்.

தளபதிகளின்கோரிக்கையை யோசித்த பிரபாகரன், தனது மகன் சார்லஸ் அந்தோணியை ஈழமண்ணில்இருக்கச் செய்து போரை தொடர்ந்து நடத்தச் சொல்லிவிட்டு, தளபதிகள்கூறுவதுபோல, அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற நீண்ட யோசனைக்குப்பின்சம்மதித் துள்ளார்.

இதையடுத்து,மே 17-ந் தேதி ஞாயிறன்று இந்தியாவின் ஆங்கில ஊடகங்களில் ஈழநிலவரம்குறித்து சிங்கள அரசு பரப்பிய தகவல்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த நேரத்தில், புலிகள் ஒரு பெருந் தாக்குதல் திட்டத்திற்குத்தங்களைத் தயார்படுத்தியிருந்தனர் என்கிறது கள நிலவரம். மிகச் சரியாகவியூகம் வகுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட அந்தத் திட்டம் இதுதான் என்றும்அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

5000கிலோ வெடிமருந்துகளை தங்கள் உடலில் கட்டிக்கொண்டு 30-க்கும் அதிகமானகரும்புலிகள் ஊடறுப்புத் தாக்குதல் நடத்துவது என்ற திட் டத்தின்படிஇருவரணி, மூவரணியாக கரும்புலிகள் பிரிந்து, முன்னேறி வந்த சிங்களராணுவத்தினர் மீது தற்கொலைத் தாக்குதலை நடத்தினர். விடுதலைப்புலிகளின்மற்ற படையணியினரும் சரமாரியாக சுட்டுக்கொண்டே ராணுவத்தை எதிர்த்துவீரச்சமர் புரிந்தனர்.

தொடர்ந்துமுன்னேற்றம் கண்டு வந்த சிங்கள ராணுவம் இதனை எதிர்பார்க்க வில்லை. தங்கள்உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் தலைவரைப் பாது காப்பதற்கான ஊடறுப்புத்தாக்குதலில் ஈடுபட்ட புலிகளை ராணுவத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை.இருதரப்பிலும் கடும் சண்டை நடந்த அவ்வேளையில், வெடிமருந்துகளுடன் பாயும்புலிகளைக் கண்டு ராணுவம் சிதறியது. இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி,பிரபாகரனை அங்கிருந்து பாதுகாப்பாக கொண்டு சென்றனர் தளபதிகள்.

புலிகளின்வசமிருந்த கடல்பகுதியில் போர்த்துகீசியர்கள் காலத்தில் கட்டப் பட்டிருந்தகோட்டை ஒன்று உண்டு. அந்தக் கோட்டைக்குள் பிரபாகரனை அழைத்துச் சென்றனர்.அந்தக் கோட்டையின் கீழ்ப் பகுதியில் பழையகாலத்து சுரங்கப்பாதை உள்ளது.அந்த சுரங்கப்பாதை வழியாக பிரபாகரனை முள்ளிவாய்க்கால் கடற் பகுதிக்குஅழைத்துச்சென்றனர். அங்கே கடற்புலிகளின் படகு தயாராக இருந்தது. அதில்பிரபாகரனை ஏறச் செய்தனர்.

அதேவேளையில்,வன்னிக்காட்டில் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியது. அப்போது, இன்னொருதற்கொலைப் படையும் படையணியும் வீரம் செறிந்த தாக்குதலைத் தொடர்ந்தது.மீண்டும் ராணுவத்தினர் சிதற, அந்தத் தருணத்தில் பொட்டு அம்மான்பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். அப்போது திறம்படக் களமாடியவர் சார்லஸ்அந்தோணி. புலிகளின் தாக்குதலில் சிதறி ஓடுவதும், மீண்டும் ராணுவம் தாக்கவருவதுமாக வன்னிக் களம் அதிர்ந்து கொண்டிருந்த நிலையில், கடற்புலிகளின்தளபதியான சூசையை பாதுகாப்பாக வெளியே அனுப்பும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

தன்குடும்பத்தின் மீது அதிகப் பாசம் கொண்டவர் சூசை. அவரது மனைவியும் 17 வயதுமகளும் ராணுவத்தின் பிடியில் சிக்கி சில நாட்கள்தான் ஆகின்றன. மனதைகல்லாக்கிக்கொண்டு, இலட்சி யத்தின் அடுத்த கட்டத்தை அடைவதற்காகபாதுகாப்பாக வெளியேறினார் சூசை.



புலிகளின்அடுத்தடுத்து 23 தற்கொலை தாக்குதல் சம்பவங் களால் இரண்டாயிரத்திற்கும் அதிகமான சிங்கள ராணுவத்தினர் செத்து விழுந்தனர். இந்தத் தாக்குதல்களைமுன்னின்று நடத் திய பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி, சிங்களராணுவத்தின் தாக்குதலுக்குள்ளாகி களப்பலி யானார். புலிகளின் கடைசிநேரஅதிரடித் தாக்குதல், சிங்கள ராணுவத்தின் 58-வது டிவிஷனை நிலைகுலையவைத்தது. புலிகள் அடிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்ற பயபீதியில்ராணுவத்தினர் சிதறி ஓடினர்.வன்னிக்காடு புகை மண்டலமானது. கடைசி இலக்கைநெருங்கிவிடலாம் என நினைத்த ராணுவத்தின் கண்களை கரும்புகை மறைத்து,முன்னேற் றத்தை முடக்கியது.


இதனால்பிரபாகரனையும் பொட்டு அம்மான், சூசை ஆகி யோரையும் பாதுகாப்பாகவெளியேற்றுவது சாத்திய மானது. அவர்கள் தனித்தனி படகில் ஒருவர் பின்ஒருவராகப் பயணித்தனர். கடற்புலிகள் பயன் படுத்தும் படகுகளின் வேகம் சிங்களராணுவத்தை மிரள வைக்கக்கூடியது. உதாரணத்திற்கு, ராமேஸ்வரத்திலிருந்துஇலங்கைக்குச் செல்ல வேண்டுமென்றால் 12 நிமி டங்களில் அந்தப் படகின்மூலமாகச் சென்று விட லாம். மின்னல் பாய்ச்சலில் செல்லும் அத்தகையபடகுகளில் பிரபாகரனும் முக்கியத் தளபதிகளும் பயணித்து, இலங்கையி லிருந்துகிழக்குத் திசை நோக்கி 3 மணி நேரப் பய ணத்தில் பாதுகாப்பான இடத்தைஅடைந்துள்ளதாக கள நிலவரங் கள் தெரிவிக்கின்றன.

சிங்களகடல் எல்லைக்குட்பட்ட ராணுவக் கப்பல்களை ஏமாற்றி விட்டுச் செல்வதுபுலிகளுக்கு கைவந்த கலை. அதே நேரத்தில், சர்வதேச கடல் எல்லையில்இலங்கைக்காகத் தீவிரக் கண்காணிப்பை மேற்கொண்டிருக்கும் இந்தியக் கடற்படைக் கப்பல்களின் கண்ணில் மணலை அள்ளிக்கொட்ட முடியுமா என்ற தயக்கம்புலிகள் தரப்பிலேயே இருந் திருக்கிறது. ஆனால், இந்தியக் கடற்படைக்குஏற்கனவே உரிய உத்தரவுகள் இடப்பட்டிருந்தன. இலங்கையிலிருந்து வெளியேறும்படகுகளைப் பிடித்துக் கொடுப்பது நமது வேலையல்ல என்பதுதான் அந்த உத்தரவு.பலவித பிரஷர்களால் இந்த உத்தரவு இடப்பட்டிருந்தது. அதனால், அந்த மின்னல்வேகப்படகு சீறிச் சென்றபோது, மேலிடத்து உத்தரவுக்கேற்ப இந்தியக் கடற்படைதனது செயல்பாடுகள் எதையும் மேற்கொள்ளவில்லையாம்.

ஞாயிறன்றுபுலிகள் மேற்கொண்ட இந்த வெற்றிகரமான ஊடறுப்புத் தாக்குதலுக்குப்பிறகுதான், திங்கட்கிழமையன்று காலையில் கடைசி நிலப்பரப்பையும்பிடிப்பதற்கான கொடூரத்தாக்குதலை சிங்கள ராணுவம் மேற்கொண்டது. பீரங்கிகள்,எறிகணைகள் ஆகியவற்றை அதிகளவில் பயன்படுத்தி தாக்குதலை நடத்தியபடியேமுன்னேறிய ராணுவம், பிரபாகரன் தங்கியிருப்பதாகத் தங்களுக்கு தகவல் வந்தபகுதியில் சகட்டுமேனிக்குத் தாக்குதல் நடத்தி கரும்புகை மண்டல மாக்கியது.எஞ்சியிருந்த புலிகளையும் அப்பாவி மக்களையும் சிங்கள ராணுவத்தின்ஆயுதங்கள் உயிர் குடித்தன.

அந்தத்தாக்குதலின்போதுதான், குண்டு துளைக்காத கவசம் கொண்ட ஒரு ஆம்புலன்ஸ்வண்டியில் பிரபாகரனுடன் பொட்டு அம்மான், சூசை ஆகியோர் தப்பிக்கமுயன்றதாகவும் அந்த வண்டிக்கு முன்னால் ஒரு வாகனத்தில் வந்த புலிகள்,ராணுவத்தை நோக்கித் தாக்குதல் நடத்தியதாகவும், பதில் தாக்குதலாக ராக்கெட்லாஞ்சர்களை ராணுவம் ஏவியபோது, பிரபா கரனும் தளபதிகளும் சென்ற ஆம்புலன்ஸ்வண்டி தாக்கப்பட்டு மூவரும் கொல்லப் பட்டதாகவும் சிங்கள அரசுமீடியாக்களுக் குப் பரப்பியது. அதனை இந்தியாவின் ஆங்கில சேனல்கள்நொடிக்கொரு முறை பரப்பிக் கொண்டி ருந்தன.



ஞாயிறுஇரவி லும் திங்கள் காலை யிலும் சிங்கள ராணுவம் நடத்திய கொடூரத்தாக்குதலில் புலிப்படையினர் பெரு மளவில் பலியாயினர். பிரபாகரன் உள்ளிட்டஅனைத்து தளபதி களின் கதையையும் முடித்துவிட்டோம் என சிங்கள அரசுகொக்கரித்துக் கொண்டிருந்தது. புலிகளை முற்றிலும் ஒழித்துவிட்டதாக பிரணாப்முகர்ஜியைத் தொடர்புகொண்டு ராஜபக்சே தெரிவித்தார்.


பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என இந்திய வெளியுறவுத்துறையும் நம்பியது. இதனை அத்துறையின் செய்தி தொடர் பாளரே பிரஸ் மீட்டில் தெரிவித்தார்.

வன்னிக்காட்டில்சிதறிக் கிடந்த புலிகளின் உடல்களை ராணுவத்தினர் வரிசையாக அடுக்கிவைத்திருந் தனர். சில உடல் கள் கருகியிருந்தன. பிரபாகரன் உள் ளிட்டபுலிகளின் முக்கியத் தலைவர் களை அடையாளம் காண்பதற்காக கருணாவைகொழும்பிலிருந்து தனி ஹெலிகாப்டரில் அழைத்து வந்தது சிங்கள ராணுவம்.புலிகளால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் இருந்த கருணா,அவர் கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டார்கள் என்ற தகவலைக் கேட்டு,உற்சாகமாகத்தான் காட்டுப்பகுதிக்கு வந்தார். வரிசையாகக் கிடத்தி வைக்கப்பட்டிருந்த சடலங்களைப் பார்த்த அவருக்கு அதிர்ச்சி.

சிங்களராணுவம் கொன்றதாகச் சொல்லப்பட்ட புலிகளின் தளபதிகளில் ஒருவரின் உடலைக்கூடகருணாவால் அங்கு பார்க்க முடியவில்லை. உதட்டைப் பிதுக்கிவிட்டுத்திரும்பிய கருணா, "மொக்கச் சிங்களனுங்க கோட்டை விட்டுட்டானுங்க' எனத் தனதுசகாக்களிடம் சொல்லி யிருக்கிறார்.

இந்தநிலையில், செவ்வாயன்று காலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றியஅதிபர் ராஜபக்சே, விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி எதுவும்சொல்லாதது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. பகல் 12 மணியளவில்,நந்திக்கடல் பகுதியில், தலையில் சுடப்பட்ட பிரபாகரனின் உடல் கிடந்ததாகசிங்கள ராணுவம் அறிவித்து, தான் எடுத்த சில க்ளிப்புங்கு களைமீடியாக்களுக்குக் கொடுத்தது.

பிரபாகரனின்தோற்றத்தை விட மெலிந்திருந்தது உடல். அவர் கையில் எப்போதும்கட்டியிருக்கும் வாட்ச் இல்லை. கழுத்தில் கயிறு அணிந்து பாக் கெட்டில் சயனைடு குப்பி வைத்தி ருப்பது வழக்கம். ஆனால், சிங்கள ராணுவம் காட்டியபடத்திலோ சயனைடு குப்பி இல்லை. ஐடென்ட்டி கார்டு காட்டப்பட்டது. இப்படி பலமுரண்பாடுகளைக் கொண்ட க்ளிப்புங்கு களைக் காட்டியதுடன், மதியம் கண்டுபிடிக்கப்பட்ட உடலை ஒரு சில மணிநேரத்தில் டி.என்.ஏ சோதனை மூலமாகஉறுதிப்படுத்தி விட்டதாகவும் சிங்கள அரசு தம்பட்ட மடித்தது.

தண்ணீரில்கிடந்த உடல் எனச் சொல்லப்பட்ட நிலையில் கைகள் மட்டும் ஊறியிருக்க, முகம்நன்கு ஷேவ் செய்யப்பட்ட நிலையில் மொழுமொழுவென இளவயது பிரபாகரன் போல்இருந்தது. இது எப்படி சாத்தியம் என்பதை தசாவதாரம் படத்தில் மாஸ்க் அணிந்தகமலை பத்து கெட்டப்புகளில் பார்த்த தொழில்நுட்பம் அறிந்தவர்களால் விளக்கமுடியும் என்கிறார்கள் தடயவியல் துறையினர்.

சிங்களஅரசின் பிரச்சாரத்தை ஊடகங்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பிக் கொண்டிருந்தவேளையில், நக்கீரனின் தொடர்ச்சியான முயற்சிகளின் மூலம் கிடைத்திருக்கும்உறுதி யான தகவல், உலகத் தமிழர்களின் நேசத்திற்குரிய விடுதலைப்புலிகளின்தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதுதான். பிர பாகரனின் மனைவி,மகள், இரண்டாவது மகன் ஆகியோர் பாதுகாப்பாக வெளிநாட்டில் உள்ளனர்.

தன்னுடையபாதுகாப்பு ஏற்பாடுகளை சரிவர ஏற்படுத்திக்கொண்டபிறகு , பிரபாகரனேஊடகத்தில் தோன்றி உரையாற்றுவார். அதுவரை சிங்கள ராணுவம் தனது தரப்புச்செய்திகளை பரப்பிக்கொண்டிருக்கும். பிரபாகரன் ஊடகங் களில் உரையாற்றும்போதுசிங்கள அரசின் மாஸ்க் முகம் அம்பலத்திற்கு வரும் என்கி றார்கள் மிகமிகமுக்கியமானவர்கள். நக்கீரனுக்கு கிடைத்துள்ள இந்தத் தகவல், ஆயிரம் மடங்குநம்பகத்தன்மை வாய்ந்தது என்பதை வாசகர்களிடம் உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

Wednesday, May 13, 2009

அரசியல்னா

அரசியல்னா சாக்கடை அதை சுத்தம் செய்ய முடியாது. இதுதான் பெரும்பாலானவர்கள்சொல்லும் கருத்து.நமக்கு எல்லாம் காமராசர் மாதிரி தலைவர் வேணும் . எப்படி ? அம்மாவுக்குமின்விசிறி, போர்வை வேணும்னா , ரெண்டும் எதுக்கு ஒரே நேரத்துல? ஒண்ணுதான்வாங்கி தர முடியும்னு சொல்ற மாதிரி ஒரு தலைவர். தன்னலமே இல்லாம உழைக்கும் ஒருதலைவர்.ஆனா நம்ம எப்படி இருப்போம். ஒருத்தன விட காசு இன்னோருத்தவன் கொடுத்தா அங்கவேலைக்கு போவோம். ஒரு ஃப்ளாட் , கார், 29 இன்ச் கலர் டீவி , வித விதமா செல்போன் இதெல்லாம் நமக்கு வேணும். அது மட்டும் இல்லாம வீக் எண்ட்ல வீட்ல ஒரு நாள்நல்ல தூக்கம், ஒரு நாள் ஷாப்பிங்னு இருக்கனும். சுயநலத்தின் மொத்த உருவமா நாமஇருப்போம். ஆனா நமக்காக உழைக்க ஒரு தியாகி நமக்கு வேணும். என்னங்கடாவிளையாடறீங்களா?படிக்காதவனுக்கு இலவச பொருட்களை கொடுத்து அரசியல் கட்சிகள் ஏமாத்துதுனு வாய்கிழிய பேசுவோம் . பழியெல்லாம் எழுத படிக்க தெரியாதவன் பேர்ல போட்டுடுவோம்.தமிழ் நாட்டோட Literacy rate 73%.. அப்ப எழுத படிக்க தெரிஞ்சவனெல்லாம் ஒழுங்காஓட்டு போட்டாலே நிச்சயம் நிலைமை மாறும், ஆனா எலக்ஷனப்ப ஓட்டு போட சொல்லி லீவ் கொடுத்தா வீட்ல உக்கார்ந்து ஜாலியா டீவி பார்ப்போம் இல்லைனா சொந்த வேலைகளை பார்ப்போம். கேட்டா ,வாக்காளர் அடையாள அட்டை இல்லை ,ரொம்ப நேரம் லைன்ல நிக்கனும்னு நொண்டி சாக்கு சொல்லுவோம்.லைசன்ஸ் எடுக்கஎடுக்கற முயற்சியிலயோ இல்லை பாஸ்போர்ட் வாங்க எடுக்கற முயற்சியிலையோ பாதிக்கூட முயற்சிசெய்யமாட்டோம். திருப்பதிலஒரு நாள்கூட க்யூல நிப்போம், அதே எலக்ஷன்ல ஓட்டு போட நிக்கமாட்டோம் . கேட்டா, நான்ஒருத்தவன் போடற ஓட்டால பெருசா என்னத்த ஒருசப்ப காரணம் சொல்லுவோம். வீட்ல உக்கார்ந்து நொண்டி நியாயம் பேசிட்டு அரசியல்வாதி நல்லவனாஇருக்கனும், படிக்காதமக்களுக்கு விழிப்புணர்ச்சி வரணும் இப்படி கண்டத பேசுவோம். ஆனா அதே நேரம்தெருவுல நம்ம வீட்டுக்கு முன்னாடி இருக்கற குப்பையை கூட கொண்டு போய் ஒரு குப்பைதொட்டில போட மாட்டோம்.வாங்கற எந்த பொருளுக்கும் பில் போட்டு வாங்க மாட்டோம். பில் போட்டா ஒரு ரூபாய்,ரெண்டு ரூபாய் அதிகமாகும்னு கடைக்காரன் சொன்னா சரி வேண்டாம்னு சொல்லிடுவோம்.இல்லைனா பில் போட 5 நிமிஷமாகும்னு சொன்னா வேணாம்னு சொல்லிடுவோம். நம்ம பண்றசின்ன சின்ன தப்பெல்லாம் நமக்கு தப்பாவே தெரியாது. அதை பத்தி நாம ஒரு நிமிஷம்கூட கவலைப்பட மாட்டோம் .எத்தனை பேர் நியாயமா வரி கட்டறோம்? எப்படி எல்லாம் அரசாங்கத்தை ஏமாத்த முடியுமோஅப்படியெல்லாம் ஏமாத்துவோம் . வாங்கற போருள் எதுக்கும் பில் வாங்காம கடைக்காரன்ஏமாத்தவும் உறுதுணையா இருப்போம் . இப்படி இருக்கற நாம கருணாநிதி சுயநலவாதி ,ஜெயலலிதா சர்வாதிகாரினு வாய்கிழிய பேசுவோம்.ரோட்ல கிடக்கற ஒரு வாழைப்பழ தோலைக்கூட எடுத்து குப்பைத்தோட்டில போடாத அளவுக்குசமூக அக்கறை கொண்ட நமக்கு, ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய்க்காக (ஒரு நிமிடம்,இரண்டு நிமிடத்திற்காக ) நேர்மையை இழக்கும் நமக்காக, தலைவர்கள் என்ன வானத்துலஇருந்தா வருவாங்க?அவுங்க அவுங்க தன்னால முடிஞ்ச அளவுக்கு பிரச்சனையில்லாத அளவுக்கு ஏமாத்தறோம்.அவ்வளவுதான்.படிச்சவன் எல்லாம் சாலைவிதிகளை கடைபிடித்தால், குப்பைகளை சரியான இடத்தில்போட்டால் அதை விரைவில் அனைவரும் பின்பற்ற ஆரம்பித்துவிடுவார்கள். வீட்லஉக்கார்ந்து கேவலமான டீவி சீரியல் பாக்கற நேரத்துல, அரட்டை அரங்கம், டாப் டென்பாக்கற நேரத்துல ஒரு தெருவுல இருக்கவங்க எல்லாம் சேர்ந்தா அந்தா தெருவையேசுத்தப்படுத்திடலாம்.அதுமட்டுமில்லாம அரசாங்கம் தான் செய்யனும்னு இல்லாம தெருல இருக்கற பசங்களுக்கோஇல்லை டியூசன் போய் படிக்க வசதியில்லாத பசங்களுக்கோ பாடம் சொல்லி கொடுக்கலாம்,தெருவுல செடி நடலாம். இன்னும் எவ்வளவோ பண்ணலாம் . எல்லாரும் ஒரு நாளைக்கு ஒருஒரு மணி நேரம் வெட்டி நியாயம் பேசறத நிறுத்திட்டு வேலை செஞ்சா கண்டிப்பாஎல்லாத்தையும் மாத்தலாம். அது இல்லாம நமக்காக உழைக்க ஒரு தலைவன் வருவான், அவன்வாழ்க்கையை தியாகம் பண்ணுவானு, வானத்தையே பாத்துட்டு இருந்தா ஒரு மண்ணும்நடக்காது .நாடுனா தலைவன் இல்லப்பா, மக்கள் தான் ... மக்கள்னா வேற யாரும் இல்லை . நாமதான்....(இந்த கட்டுரை எனக்கும் சேர்த்துதான் )

மாற்றத்தை விரும்பும்,


சுரேஷ் குமார்

Saturday, May 9, 2009

மனிதாபிமானமா?மரத்துப்போன நிலையா?மானிடமே பதில் சொல்

இந்திய அரசாங்கத்தின் நேரடி உதவிகளுக்கு நாட்டு மக்கள் நன்றி தெரிவிக்க வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் போர் நிறுத்த கோரிக்கையினை நிராகரித்த இந்தியாவின்உறுதியான நிலைப்பாடு தொடர்பில் அந்நாட்டுக்கு இலங்கை மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றது. இது ஸ்ரீலங்காவின் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவின் கூற்று
இரண்டு தசாப்தங்களுக்ளுக்கு முன்னால் ஈழத் தமிழ் மக்களுக்கு அரைகுறையான தீர்வுத் திட்டத்தைக் கூடக் கொடுக்க விரும்பாத ஸ்ரீலங்காவின் சிங்கள இனவாதிகள், இன்று எப்படி ஈழத் தமிழினத்தை தங்களுடன் சமஉரிமை தந்து ஐக்கிய இலங்கையில் ஒன்றாக உயிருடன் வாழ விரும்புவார்கள் என்பதை சற்று நேரம் சிந்தித்துப் பார்த்தால் படிக்காத பாமரனால் கூட தெளிவாகப் புரிந்து கொள்ளமுடியும்.
அத்தகைய ஓர் நிலையில் இன்று முழுமையான இராணுவ உதவி, இராணுவ ஆலோசனை, இரணுவ உளவு வேலை,இராணுவ தொழில் நுட்பம், இராணுவ தளபாடங்கள், ஆட்கொல்லிகொத்தணி-பொஸ்பரஸ்-எரிவாயு குண்டுகள் இவற்றையெல்லாம் வாரிவழங்கிய பாரத அரசு ஸ்ரீலங்கா சிங்கள அரசிடமிருந்து பாராட்டுப் பத்திரத்தை நன்றியுடன் பெற்றிருக்கின்றது.
இதற்கு ஈடாக இந்திய அரசு அவர்களுக்குக் கைமாறாகக் கொடுத்தது பல்லாயிரக்கணக்கான தமிழீழ மக்களின் உயிர்களும், இலட்சக்கணக்கான தமிழீழ மக்களை சிங்கள இராணுவத்தின் அடிமைச் சேவகத்திற்கும், அப்பாவித் தமிழ் பெண்களை கட்டாயத்தின் பேரில் கற்பழிப்பு, கருக்கலைப்பு, கற்பத்தடை. இன்னோரன்ன அழிவுகளின் ஆபத்தான நிலை.
இதனைத் தொடர்ந்து பாரத அரசே! இன்னும் என்ன செய்யப் போகிறாய்? ஈழத் தமிழர்களின் இன்னல் களையவேண்டி உனது கரங்கள் அவர்களின் இடர்களுக்கும், அழிவுகளுக்கும் எதிரிகளுக்கு எல்லாவகையிலும் உதவிசெய்து உனது பாராட்டுப் பத்திரத்தை வாங்கிப் பத்திரப்படுத்தியிருக்கிறாய்.
போதுமா இது? இல்ல , இன்னமும் ஈழத் தமிழர்களைக் காவு கொடுத்து உனது கபடநாடகத் தனத்தை காட்ட முயற்சிக்கப் போகிறாயா? உலகம் முழுவதும் ஒன்றாகச் சேர்ந்து ஸ்ரீலங்கா அரசை யுத்தநிறுத்தம் எனும் முடிவினை இறுக்கமாகச் சொல்லிக் கொண்டிருக்க நீ மட்டும் கடைசிவரை வாய்மூடி மௌனமாக இருந்துவிட்டு இன்று தேர்தல் நாடகத்திற்காக உனது பசப்பு வார்த்தைகளையும், பாசாங்குகளையும் அரங்கேற்றுகின்றாய்.
சாதாரண மக்களுக்கு உனது நாடகமெல்லாம் தெரியாமல் போய்விடலாம். ஆனால் ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும் என்ற கூத்தவைப்புலவனின் கூற்று பொய்த்துவிடாது. எங்கள் அழிவினால் ஏற்பட்ட பாவம் உங்கள் பக்கத்திலேயே பங்குதாரர்களாக நிற்கின்றது.
அன்னை இந்திரா காந்தியினதும், அவர் தம் புதல்வர்கள் இருவரினதும் சாவுக்குக் காரணமானவர்கள் உங்கள் பக்கத்தில் இருந்த பசப்பு வார்த்தைகளால் உங்கள் கண்களையும் மறைத்துக் கொண்டிருக்கும் பாசாங்குக்காரர்கள் என்பது வெகுவிரைவில் உங்களுக்குத் தெரியவரும்
அப்போது, அவர்கள் மீதமாயிருக்கும் உங்களது விதியையும் முடித்துவிட்டு பழியை யார்தலையிலாவது போடுவார்கள். அதையும் ஆமாமம் சாமி என்று சொல்லிக்கொள்ள ஆயிரம்சாமிகள் அங்கே காத்திருப்பார்கள். முடிந்தால் உண்மையை உணர்ந்து திருந்த முயற்சியுங்கள். இல்லையென்றால் உங்களை அந்த ஆண்டவன் கூடக் காப்பாத்த முடியாது. எதிரிகள் என்றும் உங்கள் பக்கத்தில்.........
- சங்கிலியன் -

Friday, May 8, 2009

நாங்களும் இந்தியர்கள்தான்....

நாங்களும் இந்தியர்கள்தான் .....
நான் நன்றாக இருக்கிறேன், என்னகென்ன குறை ?!!!...
என் சகோதரர்கள் வெட்டப்படும்,
சகோதரிகள் கற்பழிக்கப்பட்டும், என் தமிழ்
குழந்தைகள் தலையையும் கைகளையும்
கால்களையும் தொலைத்துவிட்டு
சிதறிகிடப்பதை கண்டும் கூட செயலையோ
குரலையோ உயர்த்தும் என்
உரிமைகள் பரிக்கப்படாலும் - நான்
நன்றாகவே இருக்கிறேன், என்னகென்ன குறை ?
நரிகள் ஆண்டாலும், பாம்புகள் ஆண்டாலும்
நானும் என் பெற்றோரும் இங்கு
பாதுகாப்பாகவே இருக்கிறோம்

பின்னே !!
என் பாதுகாபிற்காக என்னை இன்றுவரை
சந்தித்திராத, என்னோடு பிறக்காத என்
சகோதரர்கள்தானே தன்னை பலியிட்டு
என்னை காத்து வருகிறார்கள் !!
வேறு எந்த நாடும் இலங்கையில் கால் வைக்க
கூடாது என்பதற்காக "சின்ன வீடு" இலங்கையை,
என் தேசம் வெட்கத்தை விட்டு எப்போதும் "தாஜா"
செய்யட்டும் - அதற்கு என் தமிழ் ரத்தம்தான் தரையெல்லாம்
பாய வேண்டுமா ??...

நாம் எதற்கும் கவலைப்பட வேண்டாம் ...
தினமும் 1 மணிநேரம் கடற்கரையில் ஓடினால்
100 வயது வரை வாழலாமாம் !!!...
அவர்கள் ஒரு நாள், ஒரே ஒருநாள்
சுதந்திரமாக வாழ்ந்துவிட வேண்டும் என்று
கழுத்தில் விஷத்தோடு கல்லிலும் முள்ளிலும்
ஓடுகிறார்களே அதைபோல !!!!...


யார் சொன்னது என் கடமைகள் எனக்கு தெரியாது என்று ??
"தமிழே, தாயகமே" என்று யார் முழங்கினாலும் கொடிபிடிக்கிறேனே
அது என் ஜனநாயக கடமை இல்லையா ?
இரவு எத்தனை மணி ஆனாலும் IPL ஆட்டத்தை பார்த்துவிட்டுதான்
மறுவேலை இது என் தேசிய உணர்வு இல்லையா ??
திரையில் தோன்றும் கூத்தாடிகளுக்கு
மாலை மரியதையோடு பாலாபிஷேகம்
செய்வோம் அது எங்கள் பக்தி பரவச உணர்வு இல்லையா ??

அரைகுறை ஆடை 'நிர்வாண கூத்தாடிகளான'
நடிகைகளுக்கு நாங்கள் கட்டாத கோவில்களா ??
இதைவிட வேறு என்ன பொறுப்புகளை நாங்கள் செய்யவேண்டும்
என்று நினைகிறீர்கள் ??

இதுகளும் இதுகளின் மன்றங்களும் என்
தமிழனுக்கு செய்யாத தொண்டா ??? !!!

என்னிடம் 'டிக்கெட்' பிட்சைஎடுக்கும் நடிகனையும்
ஓட்டு பிட்சைஎடுக்கும் தலைவரையும் நான்
உயிரினும் மேலாக கருதுகிறேன்...

பின்னே !!
என் இனம் தினம் தினம் சிதறி அழிவது கண்டு
தாளமுடியாமல், உறங்கமுடியாமல் பல
மாதங்களாக உயிர் வாழ்கிறார்கள் !!


உலகிலேயே கேட்பாரற்று மிக மிக மலிவாக
கிடைப்பது தமிழனின் உயிர்தான் ... !!!
"முன் தோன்றிய மூத்தகுடிமகன்" என்று சொல்லிகொண்டாலும்
நடத்தப்படுவது என்னவோ "மூத்தகுடி-மகன்" போலதான் ....
தமிழ் தூண்களின் திறமையும் திட்டமிடலும்
'மானாட மயிலாடவில்' தெரிகிறது ..
' ஸ்பெக்ட்ரத்தில்' கலர் கலராய் தெரிகிறது
தமிழனை காப்பாற்ற நாற்பதும் பேரும்
என்னமாய் உழைக்கிறார்கள் !!...

முதலில் எல்லோருக்கும் டிவி தருவதுதான் நல்லது !!
அப்போதுதான் என் இனம், என் குழந்தைகள் தினமும்
ரத்தம் தெறித்து சாவதை பார்த்து ரசிக்கலாம் ...பங்குசந்தையையும்,
அமெரிக்க பொருளாதாரத்தையும்,
மென்பொருள் ஏற்ற இரக்கத்தையும்,
IPL ஆட்டத்தையும்,
அற்புத நடிகர்களையும்,
அரைநிர்வாண நடிகைகளையும் உற்று கவணிக்கலாம்
ஒரு காலத்தில் இவை மட்டும்தான் நம்மோடு
இருக்கும் - நம் இனம் இருக்காது ...

கொஞ்சமும் உணர்வில்லாமல் பதற்றப்படாமல்
எப்படி இதை நம்மால் பார்க்க முடிகிறது ...?
என் ஜனநாயக நாட்டில் இதற்காக பேசத்தான் முடியாது,
கோபப்படதான் கையாலாகாது.
வருத்தபடவோ அழவோ கூட இயலாதா ??இயலாது இயலாது ..... மறத்தமிழன்...
வீரத்தை வெள்ளையனுக்கும் கற்றுதந்த தமிழன் எப்படி அழுவான் ??..

நம் தந்தையின் நெஞ்சில் குண்டுகள் பாயும்போதும் ,
தாயின் உடலில் தீ பரவும்போதும்,
சகோதரனின் உறுப்புக்கள் வெட்டப்படும்போதும்,
தங்கைகள் கற்பழிக்கப்படும்போதும்,
குழந்தைகளை திசைக்கு ஒன்றாக பிய்த்து எறியும்போதும்,
கொதிக்கும் 'தார்'ல் எறியும்போதும்
இப்படிதான் பார்த்துக்கொண்டு இருப்போமா ??


என்னையே நான் கேட்டுகொள்கிறேன்
"மானத்தமிழனே.. மானத்தமிழனே... நீ இப்போது ஈனத்தமிழனே" என்று...

இலங்கை ராணுவத்தை நியாயப்படுத்தும், கணவான்களே,
புத்தர்களே....
இந்திய தலைவர்களின் உயிர்தான் உயிர்
மற்றவன் உயிர் எல்லாம் மயிர் என்று சொல்லும் மகாத்மாக்களே ...
"தமிழன்" என்பதை மறந்துவிட்டு "மனிதன்" என்ற
குறைந்தபட்ச தகுதியையாவது தந்து
நெஞ்சில் "கை" வைத்து சொல்லுங்கள்
அங்கே நடப்பதெல்லாம் சரிதானா ???
"சரி" என்று நீங்கள் சொன்னால் உங்கள்

ரத்தத்தை பரிசோதித்து கொள்ளுங்கள் !!!
அது ரத்தமாக இல்லாமல் இருக்ககூடும் !!!

"என்னை கடலிலே தூக்கி போட்டாலும்
கட்டுமரமாக தமிழர்களை காப்பேன் "
ஆகா!!
என்ன அற்புதம் !!
மீன் பிடிக்கசென்று குண்டடிபட்டு கடல்
நீரில் துடிதுடித்து இறந்து 'கட்டைமரமாய்'
தினம் தினம் மிதக்கும் தமிழர்களில் இந்த
'கட்டுமரம்' எத்தனைபேரை காப்பாற்றிஇருக்கிறது தெரியுமா ??

"தமிழன் என்று சொல்லடா
தலைநிமிர்ந்து நில்லடா" என்பது எனக்கு மட்டும்தானா ??
அவர்கள் பேசுவது தமிழ் என்றால்
அவர்களும் தமிழர்கள்தானே ??
அவர்கள் மட்டும்
" தமிழன் என்று சொல்லடா
தன்மானம் இழந்து சாவடா" என்று சொல்லி
பரதேசியாய் வாழ்வதா ??


இந்த தமிழ் மண்ணில்,
சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களும்,
கட்டபொம்முவும், மருது வீரர்களும் ஆண்ட மண்ணில்,
வள்ளுவனும், கம்பனும், பாரதியும் வாழ்ந்த மண்ணில்,
பெரியாரும், அண்ணாவும், காமராஜரும், ஜீவாவும்
நெறிபடுத்திய இம்மண்ணில்தான்
நானும் பிறந்துவிட்டேன் என்று
கர்வத்தோடு தலைநிமிர்ந்துதான் நின்றேன்..

என்குலம் என் முன்னாலேயே
அழிவது கண்டு எதுவும் இயலாமல் நிற்கையில்
குனிந்ததலை நிமிரவே இல்லை...

இந்த தன்மான தலைவர்களில் ஒருவர்
இன்று இருந்தால் கூட இதைபார்த்துகொண்டு இருப்பார்களா ?
டெல்லி நாற்காலியின் முன்னால் விழுந்து கிடந்திருப்பார்களா ??
டெல்லில் இருந்து ஈழத்தமிழர்களை நோக்கி திரும்பிய
துப்பாக்கிகள் - எங்கள்
தமிழகதமிழர்களை நோக்கி திரும்ப அதிக காலமாகாது - என்று
தெரிந்தும்கூட
"நாங்களும் உன் குழந்தைகள்தான்" என்று கூறி
"பாசமிகு" பாரதமாதாவின் மடியில்
நம்பிக்கையுடன் தலை சாய்கிறோம்..
எந்த மானிலத்தில் இழவு என்றாலும்
"அடடா ..." என்று பரிதாபப்படும் தமிழன்தான்
முன்னால்நின்று அனைத்தும் செய்கிறான்.
குஜராத் பூகம்ப நிவாரண உதவியே சான்று.
இன்று வீடெல்லாம் பிணமாய்,
என் தமிழினமே துடிக்கிறதே
எந்த மானிலத்தில் இதற்கான குரல் ஒலிக்கிறது ??

குண்டு வைத்தவனையெல்லாம் மரியாதையாக
நடத்தும் மனிதாபிமான செம்மல்கள்,
"இந்தியாதான் எல்லாமே" என்று எண்ணிக்கொண்டு,
தன் மொழிக்காக, அடையாளத்திற்காக,
சுயமரியாதைக்காக, தன்மானத்துடன் போராடும்
வர்க்கத்தை "தீவிரவாதிகள்" என்பதா ???...
அட தமிழா.. தமிழா...
எப்போதோ விடிந்துவிட்டது
இன்னுமா தூங்குகிறாய், எழுந்திரு !!!...
உன்னை பந்தியிலேயே அமரவேண்டாம் என்றாலும்
நீயோ "என் இழை சரியில்லை" என்கிறாய்....!

ஓ .... இந்தியத்தாயே.... இந்தியத்தாயே..
பிறந்தது தமிழ்மண் என்றாலும்,
பேசுவது என் 'உயிர்தமிழ்' என்றாலும்
நாங்களும் கூட இந்தியர்கள்தான்....
கேட்கிறதா, இல்லை உன் மொழியில் சொன்னால்தான் கேட்குமா ??
நாங்களும் கூட இந்தியர்கள்தான்....

நன்றி

====சத்திவேல் லோகநாதன் ====

Thursday, April 16, 2009

இந்தியாவின் நிலைப்பாடு...!

1) சிங்கள அரசிற்கு போரில் உதவக்கூடிய ரேடார் கருவிகளை தாங்கள் கொடுத்து உதவவில்லை எனச் சொன்னது.
2) வெளியுறவுத்துறை மந்திரி இலங்கைக்கு சென்று போரை நிறுத்த கோரிக்கை வைக்கப் போவதாக சொன்னது.
3) இந்திய ராணுவ வீரர்களை இலங்கை அரசின் சார்பாக களத்தில் இறக்கி அப்பாவி மக்களின் உயிர்களை அழித்துக்கொண்டிருக்கிறது. ராஜபக்சேயை ஒரு கருவியாக வைத்து சோனியா தனது தீர்மானங்களை நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறார்.
போரில் உயிரை விடும் இந்திய ராணுவ வீரர்கள் பற்றிய எந்தவொரு செய்திகளும் காணோம்.
பாவம்.. ஈழ மக்கள் இறந்தாலும் சொல்ல, கேட்க, வருத்தப்பட நாதியிருக்கிறது.
நமது ராணுவ வீரர்களின் நிலை அதைவிட பரிதாபமான நிலை.
உலக வரலாற்றில் இலங்கை இனப்படுகொலையை பற்றித் படித்து தெரிந்துகொள்ளப் போகும்
நாளைய சமுதாயம் இந்திய அரசின் நயவஞ்சக , கண்ணியமற்ற வெளியுறவுக் கொள்கை
நிலையினையும் கண்டிப்பாக நினைவில் நிறுத்தும்.
ஒவ்வொரு தமிழனும் இந்தியாவில் இருக்கிறோம் என்பதை நினைத்து
வெட்கித் தலைகுனியவேண்டிய தருணங்கள்.. காலம் பதில் சொல்லும்..

Monday, April 13, 2009

உங்கள் கவனத்திற்கு!

ஈழத்தில் தினந்தோறும் தமிழ் மக்கள் சிங்கள இனவெறி இராணுவத்தால் விமானம் மூலம் தமிழ் மக்கள் குண்டுகள் வீசி கொத்துக்கொத்தாக அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 45 நாட்களில் மட்டும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர் உடல் உறுப்புகளை இழந்திருக்கிறார்கள். இன்னும் எண்ணில்லாத சேதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வரும் உக்கிரமான போரில் சிங்கள இராணுவத்தால் தமிழினம் அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளது. கூப்பிடு தூரத்தில் ஆறுகோடி தமிழர்கள் தாய்த் தமிழ்நாட்டில் வசித்தாலும் தமிழர்களின் குரல் உலகத்தின் காதுகளுக்கு எட்டவில்லை. இல்லையென்றால் அதற்கான முயற்சிகள் யாராலும் எடுக்கப்படவில்லை.
தமிழ்நாட்டில் வழக்கறிஞர்கள் மற்றும் மாணவர்களின் வீரியமிக்கப் போராட்டங்களைத் தவிர்த்து பெரிய அளவிலான எழுச்சி மிக்க போராட்டங்கள் எங்கும் காணப்படவில்லை. முத்துக்குமார், பள்ளப்பட்டி ரவி, சீர்காழி ரவிச்சந்திரன், அமரேசன், தமிழ்வேந்தன், சிவப்பிரகாசம், கோகுல் ரத்னம் உட்பட எழுவர் தீயினால் தங்களின் இன்னுயிரை மாய்த்த பின்னும் தமிழகம் மௌனமாய் இருக்கிறது. தமிழினம் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கையில் தங்களால் அவர்களுக்கு ஏதும் உதவி செய்ய முடியவில்லை என்ற கையறுநிலையில் தங்கள் மரணமாவது தூங்கிக் கொண்டிருக்கும் தமிழினத்தின் உணர்வைத் தட்டி எழுப்புவதற்கு உதவியாக இருக்காதா என்ற எண்ணத்தில் அவர்கள் தங்களின் இன்னுயிரை மாய்த்துள்ளனர்.
ஆயுதங்களை அளித்து தமிழினத்தை அழிப்பதில் பெரும்பங்கு வகிக்கும் மத்திய அரசின் முகமூடி கிழித்தெறியப்பட வேண்டும், அதற்கான போராட்டத்தில் தமிழினம் அணிதிரளவேண்டும் என்பதுதான் அவர்களின் பிரதான நோக்கமாக இருந்தது. அந்த நோக்கம் நிறைவேற அவர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்து தங்கள் கடமையை மிக அதிக அளவில் நிறைவேற்றியிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் நோக்கம் நிறைவேறியிருக்கிறதா என்று பார்த்தோமானால் ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. இதற்குக் காரணம் அவர்களின் மரணத்தை வைத்து போராட்டத்தை வழி நடத்த வேண்டிய தலைவர்கள் தங்களின் கடமையை சரிவரச் செய்யாததேயாகும்.
இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்திற்கும், அதில் இடம்பெற்றிருக்கிற தலைவர்களுக்கும், ஈழத்தமிழர் நலனைவிட தங்களின் சொந்த அரசியல் நலனே மேலோங்கி நிற்கிறது. விடுதலைப்புலிகளின் பிரச்சார பீரங்கியாகத் திகழும் வைகோ மகிந்த இராஜபக்சேவின் குரலாக ஒலிக்கும் ஜெயலலிதாவின் காலடியில் நின்று ஈழத்தமிழர் நலன் பற்றிப் பேசுகிறார். கருணாநிதியின் ஈழத் தமிழருக்கு எதிரான துரோகத்தை நீட்டி முழங்கும் வைகோ மறந்தும் கூட ஜெயலலிதாவின் துரோகத்தைப் பற்றி மூச்சுக்கூட விடுவதில்லை. சோனியா காந்தியின் மந்திரி சபையில் பதவி வகித்துக் கொண்டு காங்கிரசின் துரோகத்தைப் பற்றி அதிகம் பேசாமல் தன்மீதான விமர்சனக் கணைகளை லாவகமாக கருணாநிதியின் பக்கம் திருப்பிவிட்டு அரசியல் செய்கிறார் இராமதாஸ். மத்திய அரசின் துரோகத்தைப் பற்றி ஒவ்வொருநாளும் ஒவ்வொரு குரலில் பேசும் திருமாவளவன் மத்திய அரசின் துரோகத்தில் பங்கு வகிக்கும் கருணாநிதிக்கு எதிராக மறந்தும் பேச மறுக்கிறார். மதவாத பா.ஜ.க.வோ ஈழத் தமிழர் பிரச்சனையில் தமிழர்களை அழிக்கும் மத்திய அரசு மற்றும் காங்கிரஸ் கட்சியின் கொள்கையை அடியற்றி தனது கொள்கைகளை வைத்திருக்கிறது. ஈழத் தமிழர் கோ¤க்கைகளை ஒப்புக்கு வலியுறுத்திப் பேசி அதன் மூலம் தமிழகத்தில் கட்சியை வளர்க்க முடியாதா என்று வாய்ப்பு தேடுகின்றது. அவர்களையும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் சேர்த்துக் கொண்டு ஈழத் தமிழர் நலனுக்காக போராடுகின்றனர்.

சில மாதங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் மிகக் குறைந்த விழுக்காட்டு அளவே உள்ள குஜ்ஜார் இன மக்கள் தங்கள் வீரியமிக்க போராட்டத்தின் மூலம் ஒரே வாரத்தில் இந்தியாவையே தங்கள் பக்கம் திரும்ப வைத்தனர். தங்கள் கோரிக்கைகளையும் வெற்றிகரமாக ந¤றைவேற்றிக் கொண்டனர். அத்தகைய போராட்டத்தை நாம் தற்பொழுது நினைவில் கொள்ள வேண்டும்.
பதினெட்டு வருடங்களுக்கு முன்பு செத்துப்போன ராஜீவ்காந்தியின் மரணம் இன்று வரை வெற்றிகரமாக அவர்களால் அவர்களின் அரசியலுக்கு பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த அறுவரின் மரணமும் கேட்பாரற்றுக் கிடக்கிறது. இவ்வாறு யாருடைய உழைப்பும் இல்லாமல், யாருடைய அணிதிரட்டலும் இல்லாமல் பாதிக்கப்படும் ஈழத் தமிழர்களுக்காக தமிழ்நாடு முழுவதும் இயல்பாய எழுந்த மக்கள் எழுச்சி, சரியான வழிகாட்டுதலும், முன்னெடுத்தலும் இல்லாமல் கண்முன்னே கரைந்துகொண்டிருக்கிறது. பற்றி எரிய வேண்டிய தமிழகம் சருகாகக் கிடக்கின்றது. எழுவர் பற்றி வைத்த தீயை தலைவர்கள் விழலுக்கு இரைத்த நீராக மாற்றிவிட்டார்கள்.
ஆகவே இனிமேலாவது போராட்டங்களை சடங்காகச் செய்வதை நிறுத்திவிட்டு உலகத்தின் கவனம் நம்மீது திரும்பும் வகையில் நடத்த வேண்டும். இல்லையென்றால் கண்முன் இனம் அழிவதை பார்த்துக் கொண்டிருக்கும் மௌன சாட்சிகளாக நாமும் இருப்போம்.!


நன்றி
கீற்று .com

ஹையோ....,ஹையோ...!!!


வருண் காந்தி : "எல்லாரும் பாத்துக்கோங்க... நான் ஜெயிலுக்கு போறேன்..

நான் ஜெயிலுக்குப் போறேன்... நான் ஜெயிலுக்கு போறேன்..."


ராகுல் காந்தி : "சின்னப்புள்ள தனமாயில்ல இருக்கு!"


கருணாநிதி : "பாடி ஸ்ட்ராங்... ஆனா.. பேஸ்மென்டுதான் கொஞ்சம் வீக்."


ஜெயலலிதா : "யப்பா...இப்பவே கண்ணைக் கட்டுதே.."


ராமதாஸ் : "பட்.. எனக்கு அந்த டீலிங் ரொம்ப புடிச்சி இருந்தது."


விஜயகாந்த் : "அது போன மாசம்... நான் சொல்றது இந்த மாசம்.."


வைகோ : "இது வரைக்கும் நல்லாத்தானே போய்ட்டிருந்தது?"


தங்கபாலு : "வேணா... வலிக்குது... அழுதுருவேன்...!"


விஜய டி ராஜேந்தர்: "இதுவரைக்கும் என்ன யாரும் தொட்டதில்ல..!"


சோனியா காந்தி: "என்னா வில்லத்தனம்?"


அத்வானி : "ராஜதந்திரந்தை கரைத்து குடித்துவிட்டாயடா"


மன்மோகன் சிங் : "என்னைய வெச்சு காமெடி கீமிடி பண்ணலையே!"


மாயாவதி : "ஒரு க்ரூப்பாத்தான்யா அலயுறாங்க"


லாலு பிரசாத் யாதவ் : "வரும்... ஆனா... வராது."


பிரணாப் முகர்ஜி : "முடியல..."


திருமாவளவன் : "இப்படித்தான் உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்பெல்லாம் ரணமாயிருது."


சரத்குமார் : "ரிஸ்க்கு எடுக்குறது எனக்கு ரஸ்க்கு சாப்புடுற மாதிரி"


கார்த்திக் : "அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...."


ரோஜா : "ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ?"

Saturday, April 11, 2009

"தேர்தல் அறிக்கை"

இரண்டு படங்கள் நடித்து முடித்ததும் புதுக்கட்சி, ஒரு இடைத்தேர்தலைச் சந்தித்த கையோடு முதல்வர் நாற்காலிக் கனவு என்பதே இன்று அரசியல் தத்துவமாகிவிட்டது.
இவர்களிடமிருந்து மக்கள் பெரிதாக என்ன எதிர்பார்க்க முடியும்?
என்ன மாதிரியான தொலைநோக்கு சிந்தனை இவர்களுக்கு இருக்கும்?

பாரதிய ஜனதாவோ, ராணுவத்தினரும், எல்லைப் பாதுகாப்புப் படையினரும் வருமானவரியிலிருந்து விலக்களிக்கப்படுவார்கள் என்கிறது. இப்படி வரி வருமானத்தில் விலக்குகள் அளிக்கப்படத் தொடங்கினால், அதற்கு ஒரு முடிவே கிடையாதே. வருமான இழப்பு ஒருபுறம்; இலவச வாக்குறுதிகள் மற்றொருபுறம். அரசு செயல்படுவது எங்ஙனம்?

தமிழகத்தில் தொடங்கிய இலவச சைக்கிள் திட்டம், வண்ணத் தொலைக்காட்சி விநியோகம் மற்றும் கிலோ ஒரு ரூபாய் அரிசி போன்ற திட்டங்கள் ஏனைய மாநிலங்களின் அரசியல் கட்சிகளால் தேர்தல் நேர வாக்குறுதிகளாக்கப்பட்டிருக்கின்றன.

தேவை உள்ளவர்கள், இல்லாதவர்கள் என்கிற பாரபட்சமே இல்லாமல், அரசு பணத்தை எடுத்து வருவோர் போவோருக்கெல்லாம் விநியோகம் செய்வது என்பது என்ன புத்திசாலித்தனமோ தெரியவில்லை. இப்படிப்பட்ட ஊதாரித்தனத்தின் விளைவுகளை, மீண்டும் பொதுமக்கள்தான் பாவம் சகித்துக் கொள்ள நேரிடும் என்பதுதான் துர்பாக்கியம்.

கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதையாக நமது அரசியல் கட்சிகள் வாய்க்கு வந்த வாக்குறுதிகளை அள்ளி வீசுவதற்குப் பெயர் தேர்தல் அறிக்கை என்றாகிவிட்டிருக்கிறது. எந்தவித செயல்திட்டமோ, கொள்கைப் பிடிப்போ இல்லாமல், எப்படியாவது வாக்காளர்களைக் கவர்ந்து ஆட்சியில் அமர்ந்து விடுவது மட்டும்தான் தங்களது லட்சியம் என்று அரசியல் கட்சிகள் நினைக்கத் தொடங்கிவிட்டன.

தேர்தலில் அரசியல்வாதிகள் வாக்காளர்களுக்கு இலவசம் என்கிற பெயரில் வாரி வழங்கும் வாக்குறுதிகளும் ஒருவகையில் லஞ்சம்தான். இது ஆபத்தின் அறிகுறி!

இலங்கையில் நடைபெறுவது வெளிப்படையான இனவெறிப் போர்: இந்திய எழுத்தாளர் அருந்ததி ராய்!



இலங்கையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது, மக்களின் பார்வைக்கு படாமல் திறமையாக மறைக்கப்படுகின்ற, வெட்கமற்ற முறையில் வெளிப்படையாக நடத்தப்படுகின்ற இனவெறிப் போர் என இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான அருந்ததி ரோய் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியாவின் தேசிய ஆங்கில நாளிதழான 'ரைம்ஸ் ஒஃப் இந்தியா' வுக்கு எழுதிய கட்டுரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உலக அளவில் இலக்கியத்துக்காக அளிக்கப்படும் முக்கிய விருதுகளில் ஒன்றான 'புக்கர் பரிசு' பெற்ற 'த கொட் ஓஃப் ஸ்மோல் திங்ஸ்' எனும் புதினத்தை எழுதியவர் அருந்ததி ரோய்.
இலக்கியப் பணிகளுக்கு இடையே சமூகத்தின் தீவிரப் பிரச்சினைகள் குறித்து பேசுவதுடன் அவற்றுக்கு எதிராக களமிறங்கி சமூக சேவையிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அவரின் கட்டுரையை இங்கு தமிழில் தருகிறோம்:
இலங்கையில் நிகழ்ந்து கொண்டிருக்கும் பயங்கரத்துக்கு, சூழ்ந்துள்ள மௌனமே காரணம். அங்கே என்ன நடக்கிறது என்பதைப் பற்றி, இந்தியாவில் உள்ள முதன்மையான செய்தி ஏடுகளிலும், தொலைக்காட்சிகளிலும் சரி, அனைத்துலக செய்தி ஏடுகளிலும் சரி ஏறக்குறைய செய்திகளே வெளிவருவதில்லை. ஏன் இப்படி இருக்கிறது என்பது ஆழ்ந்த கவலை அளிக்கும் விடயமாகும்.
இலங்கையில் இருந்து கசிந்து வரும் சிறிதளவு தகவல்களை வைத்துப் பார்க்கும்போது, நாட்டில் ஜனநாயகத்தின் அடையாளம் ஏதேனும் தென்பட்டால் அதனைத் தகர்ப்பதற்கும், அப்பாவித் தமிழ் மக்களுக்கு எதிராக சொல்ல முடியாத குற்றங்களை இழைப்பதற்குமே 'பயங்கரவாதத்துக்கு எதிரான போர்' என்ற பரப்புரையை சிறிலங்கா அரசு ஒரு மூடு திரையாகப் பயன்படுத்தி வருகிறது என்றே தோன்றுகிறது.
தங்களை அப்பாவிகள் என்று மெய்ப்பிக்காத வரையில், ஒவ்வொரு தமிழரும் பயங்கரவாதிதான் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் செயற்படும் சிறிலங்கா அரசு, அப்பாவி மக்கள் உள்ள பகுதிகள், மருத்துவமனைகள், தங்கும் இடங்கள் மீது குண்டு வீசி அவற்றைப் போர்ப் பகுதியாக மாற்றி வருகிறது.
சண்டை நடைபெறும் பகுதியில் 2 லட்சம் அப்பாவித் தமிழ் மக்கள் சிக்கியிருப்பதாக நம்பகமான மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, இடம்பெயர்ந்து வரும் தமிழர்களுக்காக, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் பல்வேறு 'நலம் காக்கும் சிற்றூர்கள்' அமைக்கப்பட்டுள்ளதாக அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சிற்றூர்கள், போர் நடைபெறும் பகுதியில் இருந்து தப்பி ஓடிவரும் அப்பாவி மக்கள் அனைவரையும் கட்டாயமாக அடைத்து வைக்கும் நடுவங்களாக இருக்கும் என்று த டெய்லி டெலிகிராப் (2009 பெப்ரவரி 14) நாளேட்டுச் செய்தி தெரிவிக்கிறது.
இவை சித்திரவதை முகாம்களுக்கு மறைமுகப் பெயரா? சிறிலங்கா அரசின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர த டெய்லி டெலிகிராப் நாளேட்டில் பின்வருமாறுகூறியிருக்கிறார்: பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்ற பெயரில் சில மாதங்களுக்கு முன்பு கொழும்பு நகரில் உள்ள அனைத்துத் தமிழர்களையும் அரசு பதிவு செய்யத் தொடங்கியது.
ஆனால், 1930-களில் ஹிட்லரின் நாசிப் படையினர் பயன்படுத்தியது போல, இது வேறு காரணங்களுக்குப் பயன்படுத்தப்படலாம். அவர்கள், அப்பாவித் தமிழ் மக்கள் அனைவரையும் பயங்கரவாதிகள் ஆகும் வாய்ப்புள்ளவர்கள் என்று முத்திரை குத்தப் போகிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
விடுதலைப் புலிகளைத் 'துடைத்து எறிய வேண்டும்' என்பதை சிறிலங்கா அரசு அறிவிக்கப்பட்ட குறிக்கோளாகக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, அப்பாவி மக்களும், 'பயங்கரவாதிகளும்' வீழ்ந்து கொண்டிருப்பது, சிறிலங்கா அரசு இனப் படுகொலையை நடத்தும் விளிம்பில் இருப்பதன் அறிகுறியாகத் தோன்றுகிறது.
ஏற்கெனவே பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐ.நா. மதிப்பீடு ஒன்று தெரிவிக்கிறது. மேலும் பல்லாயிரம் பேர் படுகாயம் அடைந்துள்ளனர். நேரில் கண்ட சாட்சிகள் சிலர் வெளியிட்டுள்ள தகவல்கள் நரகத்துக் கொடுமைகளின் அனுபவச் சித்திரிப்புகளாக உள்ளன.
இலங்கையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது, மக்களின் பார்வைக்குப் படாமல் திறமையாக மறைக்கப்படுகிற, வெட்கமற்ற முறையில் வெளிப்படையாக நடத்தப்படுகிற இனவெறிப் போர் என்றுதான் சொல்ல வேண்டும்.
தண்டனைக் உட்படாமல் சிறிலங்கா அரசு இந்தக் குற்றங்களை இழைத்து வருகிறது. ஆழமாக வேரோடியுள்ள இனவெறித் தப்பெண்ணங்கள்தான் இலங்கையில் தமிழர்கள்ஒதுக்கப்படுவதற்கும், ஒடுக்கப்படுவதற்கும் வழிவகுத்துள்ளன என்பதையே இது உண்மையில் வெளிப்படுத்துகிறது. அந்த இனவெறிக்கு சமூகப் புறக்கணிப்பு, பொருளாதார முற்றுகை, கலவரம், சித்திரவதை என நீண்ட வரலாறு உண்டு.
வன்முறையற்ற அமைதி வழியிலான எதிர்ப்பாகத் தொடங்கி, பல பத்தாண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டுப் போரின் கொடிய தன்மைக்கான வேர்கள் இதில்தான் அடங்கியுள்ளன.
ஏன் இந்த மௌனம் இலங்கையில் இன்று சுதந்திரமாகச் செயற்படும் நாளேடுகள், தொலைக்காட்சிகளே ஏறக்குறைய இல்லை என்று இன்னொரு நேர்காணலில் மங்கள சமரவீர கூறியிருக்கிறார்.
சமுதாயத்தை 'அச்சத்தில் உறைய வைக்கிற' கொலைக் கும்பல்கள், 'வெள்ளை வேன் கடத்தல்கள்' தொடர்பாக எல்லாம் சமரவீர தொடர்ந்து பேசுகிறார். பல்வேறு பத்திரிகையாளர்கள் உட்பட எதிர்ப்புக் குரல் கொடுப்பவர்கள் கடத்தப்படுகின்றனர், படுகொலை செய்யப்படுகின்றனர்.
பத்திரிகையாளர்களைப் பேசவிடாமல் செய்வதற்கு, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள், காணாமல் அடித்தல், படுகொலை செய்தல் முதலிய எல்லாவற்றையும் சிறிலங்கா அரசு பயன்படுத்துவதாக அனைத்துலக பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. மனித குலத்துக்கு எதிரான இந்தக் குற்றங்களில் சிறிலங்கா அரசுக்கு இந்திய அரசு பொருள் உதவியும், ஆயுத உதவியும் அளித்து வருவதாக, கவலை அளிக்கிற உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
உண்மையாக இருக்கும் எனில் இது அறநெறிக்கு எதிரானது, ஏற்றுக் கொள்ள முடியாதது. மற்ற நாடுகளின் அரசுகள் என்ன செய்கின்றன? பாகிஸ்தான்? சீனா? சிறிலங்கா நிலைமைக்கு உதவி செய்ய அல்லது தீங்கு விளைவிக்க என்ன செய்கின்றன?
இலங்கையில் நடைபெறும் போர் தமிழ்நாட்டில் உணர்ச்சிக் கொந்தளிப்புக்களை ஏற்படுத்தி உள்ளது. 10-க்கும் அதிகமானோர் தீக்குளித்து இறந்துள்ளனர். அரசியல் தந்திர வெளிப்பாடுகள் சில இருந்தாலும், பெரும்பாலும் மக்களின் சீற்றமும், வேதனையும் மெய்யானவை. இது தேர்தல் சிக்கலாக மாறியிருக்கிறது.
இந்தக் கவலை இந்தியாவின் பிற பகுதிகளுக்குப் போய்ச் சேரவில்லை என்பதுதான் அசாதாரணமானது. இங்கே ஏன் இந்த மௌனம்? இந்தச் சிக்கலில் இங்கே 'வெள்ளை வான் கடத்தல்கள்' எதுவும் இல்லையே. இலங்கையில் என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்ற பாதிப்பின் அளவை வைத்துப் பார்க்கும்போது, இந்த மௌனம் மன்னிக்க முடியாதது.
முதலில் ஒரு பக்கத்துக்கு ஆதரவாகவும் பிறகு இன்னொரு பக்கத்துக்கு ஆதரவாகவும் நிலை எடுத்து பொறுப்பற்ற முறையில் பட்டும் படாமல் மேலோட்டமாகச் செயற்படும் இந்திய அரசின் நீண்ட கால வரலாற்றைப் பார்க்கும்போது இந்த மௌனம் மிகவும் மன்னிக்க முடியாதது. நான் உட்பட, நம்மில் பலரும், இது தொடர்பாக முன்பே குரல் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் போர் பற்றிய தகவல்கள் சரியாகக் கிடைக்காததே அதற்குக் காரணம்.
படுகொலைகள் தொடர்கின்றன. பல்லாயிரக்கணக்கான மக்கள் சித்திரவதை முகாம்களில் அடைக்கப்படுகிறார்கள். 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பட்டினிக் கொடுமையை எதிர்நோக்கி உள்ளனர். ஓர் இனப் படுகொலை நிகழ்வதற்குக் காத்திருக்கிறது. இந்த நிலையில் இந்த மாபெரும் நாட்டில் ஏன் இந்த சாவு அமைதி? இது மாபெரும் மனிதப்பேரழிவுத் துன்பம். காலம் கடப்பதற்கு முன் உலகம் இப்போதே தலையிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, April 10, 2009

இந்தியா, இந்தியா மற்றும் இந்தியாவே எல்லாம்!


வன்னியில் இன்று மும்முரமாக முன்னெடுக் கப்படும் போரின் மூலம் என்ன?... தமிழினத்தின் உண்மையான எதிரி யார்?... அந்த எதிரியை முறியடிக்க உலகத் தமிழர்கள் இன்று செய்ய வேண்டியது உண்மையில் என்ன?... என்ற விடயங்களை இங்கே ஆராய்கின்றார் தி.வழுதி.
"புதினம்" செய்திப் பிரிவு மிகக் கவனமாக - ஆதாரபூர்வமான தகவல்களின் அடிப்படையில் - சேகரித்த விபரங்களின் படி கடந்த ஒரு மாத காலத்திற்குள், அதாவது 2009 ஆம் ஆண்டு பிறந்த பின்னர் மட்டும் இலங்கையில் 439 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு விட்டனர்.பச்சிளம் குழந்தைகளும், பாலகர்களும், சிறுவர்களும், முதியோர்களும் என படுகாயப்படுத்தப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை 1,772.
அதாவது - சராசரியாக - ஒவ்வொரு நாளும் 14 தமிழர்கள் கொல்லப்பட்டு, 57 தமிழர்கள் காயப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை - இந்த ஒவ்வொரு நாளும் - போர்க்களத்தில் வீழ்ந்து போன, விழுப்புண்பட்ட புலிப் போராளிகளின் எண்ணிக்கை இங்கே சேர்க்கப்படவில்லை. இறந்து போன, போர்க்காயமடைந்த அவர்களும் தமிழர்களே.
இது தவிர - வன்னியில் இருந்து வெளியேறிய 160 வரையான தமிழ் இளம் பெண்களும், இளைஞர்களும் - இரகசியமான சித்திரவதை முகாம்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு - வதை செய்யப்பட்டு கொன்று புதைக்கப்பட்டதாக வெளியில் சொல்ல முடியாத ஆதாரங்களில் இருந்து நம்பகமான தகவல்கள் உண்டு.
தெளிவாக - இது ஓர் இனப்படுகொலைப் போரே அன்றி வேறொன்றும் அல்ல.
ஆனால் - இந்த இனப் படுகொலைப் போரை நடத்துவது யார் என்பதிலும், அதற்கு எதிராக நாம் செய்ய வேண்டியது என்ன என்பதிலும் தான் எமக்கு தெளிவு தேவை.
பிண மலையாகத் தமிழர்கள் வன்னியில் குவிந்தாலும் சரி, முத்துக்குமாரர்களாக "சாஸ்திரி பவன்" முற்றத்தில் தமிழர்கள் எரிந்தாலும் சரி - அன்னை சோனியாவின் ஆன்மா கரையப் போவதில்லை.
தமிழ்த் தேசிய எழுச்சித் தீயை அணைத்து அடக்கும் வரை - காங்கிரசின் இந்திய வல்லாதிக்கம் ஓயப்போவதில்லை.
பிரபாகரனின் சவப்பெட்டியில் கடைசி ஆணியை அடிக்கும் வரை - சோனியா காந்தி நிம்மதியாக தூங்கப் போவதில்லை.
என்றோ இறந்து போன ராஜீவ் காந்திக்காக - நேற்றும் இன்றும் நாளைக்கும், இனி என்றும் தமிழர்களைப் பழி தீர்த்துக்கொண்டே இருக்கப் போகின்றது காங்கிரசின் இந்தியா.
சிவ்சங்கர் மேனனையும், பிரணாப் முகர்ஜியையும், தமிழ்நாட்டு மக்கள் கொடுத்த உணவு மூட்டைகளையும் சிறிலங்காவுக்கு பகிரங்கமாக அனுப்பி - மற்ற நாட்டுக்காரர்களைத் தள்ளி நிற்க வைத்து விட்டது இந்தியா.
நோர்வேயின் எரிக் சொல்கெய்ம் - மிக அண்மையில் - புலிகளிடம் நேரடியாகவே சொல்லிவிட்டார், "இப்போது எமது கையில் எதுவுமே இல்லை", என்று.
உலகத் தமிழர்களே! இது எமக்குரிய நேரம்: இதுவே தான் எமக்கான நேரம்!
எமக்காக எழுந்துவிட்ட ஏழு கோடி தமிழகத் தமிழர்களுடன் சேர்ந்து - உலகத் தமிழர்கள் நாம் - எம்மைப் பழி தீர்க்க முனையும் இந்தியாவின் இந்த குரூர வெறிக்கு ஒரேயடியாக முடிவு கட்ட வேண்டும்.
ஊரில் நடைபெறும் நிகழ்வுகளின் செய்திகளைப் பார்த்து, கொதிப்படைந்து - ஏதாவது செய்தாக வேண்டும் என்ற உணர்வுப் பெருக்கோடு எதையாவது செய்து கொண்டிருக்கின்றோம்.
உலகு எங்கும் - கவனயீர்ப்பு நிகழ்வுகள் செய்து, ஆர்ப்பாட்டப் பேரணிகள் வைத்து, மனுக்கடிதங்கள் எழுதி, மனிதச் சங்கிலிகள் பிடித்து - எங்கள் கோபத்தையும், ஆதங்கத்தையும் பிழையான இடங்களின் மீது நாம் காட்டிக்கொண்டிருக்கின்றோம்.
சிறிலங்கா அரசின் மீது அழுத்தம் போட்டு தமிழர் இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்தமாறு உலக நாடுகளையும், ஐக்கிய நாடுகள் சபையையும் நாம் வேண்டுகின்றோம்.
ஆனால் - தமிழர் இனப் படுகொலையை நிகழ்த்துவது சிறிலங்கா அல்ல; அது இந்தியாவே என்பதை நாம் உணர வேண்டும்.சிறிலங்கா இப்போது வெறும் பொம்மை மட்டுமே; இது இந்தியா இயக்கும் போர் என்பது எல்லோருக்குமே தெரியும்.
இப்போதுள்ள சூழலில் - தென்னாசியாவில், இந்தியாவை மீறி எதுவுமே நடக்கப்போவதில்லை.
மேற்குலக நாடுகள் என்றாலும் சரி, ஐக்கிய நாடுகள் சபை என்றாலும் சரி -
ஆகவும் மிஞ்சிப் போனால் - எமது ஆய்க்கினை தாங்காமல் - ஒரு அறிக்கையை விடுவார்கள்; கவலை தெரிவிப்பார்கள். அதற்கு மேல் அவர்கள் எதுவுமே செய்ய மாட்டார்கள்; அவர்களால் எதுவும் செய்யவும் இயலாது.
இந்தியா, இந்தியா மற்றும் இந்தியாவே எல்லாம்.
"வெள்ளை மாளிகை" முன்றலிலும், "டவுணிங் ஸ்ட்றீட்"டிலும், ஒட்டாவாவின் வீதிகளிலும் மற்றும் மேற்குலகின் சாலைகளிலும் நாம் நடத்தும் பேரணிகள் உண்மையில் அந்தந்த நாடுகளின் அரசுகளுக்குச் சங்கடங்களையே ஏற்படுத்தும்.
எம் மீது ஒரு வகையான சினத்தைக்கூட - அந்தந்த நாட்டு அரசுகளினதும், அந்தந்த நாட்டு மக்களினதும் மனங்களில் - உருவாக்கப் பார்க்கும். ஒரு வகையில் - தேவையற்ற பகை உணர்வைக்கூட, அது தமிழர்களுக்கும், மேற்குலகிற்கும் இடையில் ஏற்படுத்தும்.
மேற்குலக அரசுகளின் ஆதரவு பின்னால் எமக்கு தேவை: இப்போது, எதுவும் செய்ய முடியாத சூழலில் அவர்கள் இருக்கும் போது - அவர்களைச் சங்கடப்படுத்துவது நமக்கு நன்மையைச் செய்யாது; அது அழகும் அல்ல.
எனவே - அளவுக்கு அதிகமான தொந்தரவைக் கொடுக்காமல் ஓரு தூர நோக்கப் பார்வையோடு மேற்குலகை நாம் விட்டுவைக்க வேண்டும்.
இப்போது -
எமது துடிப்பு - சக்தி - கவனம் எதனையும் வேறு இடங்கள் நோக்கிச் சிதற விடாமல் - எல்லாவற்றையும் இந்தியாவை நோக்கியே நாம் செலுத்த வேண்டும்.
உலகத் தமிழர்களின் பொங்கும் உணர்வு எழுச்சியைப் பல திசைகளிலும் பரவ விட்டு, எல்லா இடங்களிலும், எல்லாவற்றையும் செய்துகொண்டிருக்காமல் -
அதை ஒருங்கே குவித்து - சரியான இலக்கை நோக்கி நகர வைக்க வேண்டிய பொறுப்பு அந்தந்த நாடுகளிலுள்ள தமிழ் செயற்பாட்டாளர்களின் கைகளிலேயே இப்போது உள்ளது.
அந்த சரியான இலக்கு - இந்தியா.
என்றுமில்லாத அளவுக்கு பேரெழுச்சி கொண்டுள்ள தமிழக மக்களுக்குப் பின்னால் உலகத் தமிழர்கள் உடனேயே அணிதிரள வேண்டும். எமக்காகப் போராடும் அவர்களோடு நாம் ஒன்றிணைய வேண்டும்.
விடுதலைப் புலிகளின் கோலாகலமான ஒரு போர் வெற்றிக்காக இரண்டு வருடங்கள் நாம் காத்திருந்தோம்: எதுவுமே நடக்கவில்லை; நடக்க இந்தியா விடவில்லை.
இப்போது - காங்கிரஸ் ஆட்சியின் கேவலமான ஒரு வீழ்ச்சிக்காக நான்கு மாதங்கள் காத்திருக்க எமக்கு அவகாசம் எதுவும் இல்லை; அதன் பிறகு கூட ஏதாவது நடக்கும் என்பதற்கு எந்த உத்தரவதமும் இல்லை.
உலகு எங்கும் உள்ள இந்தியத் தூதரகங்களை நாம் இப்போதே முற்றுகைக்கு உள்ளாக்க வேண்டும்.
தொடர்ச்சியாக - இடைவிடாமல் - ஒருங்கு திரட்டப்பட்ட செயல் வீச்சோடு - அதை நாம் பல்லாயிரக்கணக்கில் திரண்டு செய்ய வேண்டும்.
லண்டன் நகர வீதிகளில், ஒரு லட்சம் பேர், ஒரே நாளில் திரண்டு பிரித்தானிய மக்களின் அன்றாட வாழ்வுக்குச் சிரமங்கள் தருவதைத் தவிர்த்து விட்டு - லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்தை 5 ஆயிரம் பேராக ஒரு சுழற்சி முறையில் 20 நாட்களுக்கு முற்றுகையிட வேண்டும்.
அதேபோல - ரொறான்ரோ நகர வீதிகளில், 80 ஆயிரம் பேர், ஒரே நாளில் திரண்டு கனடிய மக்களின் அன்றாட வாழ்வுக்கு அலுப்புத் தருவதைத் தவிர்த்து விட்டு - கனடாவுக்கான இந்தியத் தூதரகத்தை 4 ஆயிரமாக ஒரு சுழற்சி முறையில் 20 நாட்களுக்கு முற்றுகையிட வேண்டும்.
இதே போல ஒவ்வொரு நாடுகளிலும் செய்ய வேண்டும்.
தமிழர் பிரச்சினை தவிர வேறு எதைப் பற்றியுமே சிந்திக்க முடியாத - நாளாந்த அலுவல்களில் சிரத்தை காட்ட முடியாத - செயலிழப்பு நிலைமைக்கு வெளிநாட்டு இந்தியத் தூதரகங்களை நாம் உள்ளாக்க வேண்டும்.
எமது இடைவிடாத முற்றுகைகள் மூலம் - தூதரக அதிகாரிகளையும், தூதுவர்களையும் செயற்பட முடியாத அளவு எரிச்சலுக்கும், சினத்திற்கும் உள்ளாக்க வேண்டும்.
தமது தூதரகங்களுக்கே சென்றுவர முடியாதுள்ள - தமது பணிகளை ஆற்ற முடியாதுள்ள தமது கையாலாகாத்தனத்தை அவர்கள் டெல்லித் தலைமைக்கு முறையிட வைக்க வேண்டும்.
தமிழ் இனத்தைப் படுகொலை செய்து அழிக்கும் போரின் சூத்திரதாரி சிறிலங்கா அல்ல; இந்தியா தான் என்பதை இந்த உலகின் முற்றத்தில் நாம் ஓங்கி ஒலிக்க வேண்டும்.
இந்தியா நடத்தும் இந்தப் படுகொலைப் போரின் பழியை இந்தியாவின் தலையிலேயே நாம் சுமத்த வேண்டும்.
ஓரு பழம்பெரும் இனத்தை அழிக்கும் நாடு என்ற அவமான வெட்கத்தை இந்தியாவின் முகத்தில் நாம் பூச வேண்டும்.
அதனை நோக்கியே எமது செயற்பாடுகள் யாவும் அமைய வேண்டும்.
உண்மையில் - மேற்குலகத் தலைவர்களுக்கும், கொள்கை வகுப்பாளர்களுக்கும் நாம் நேரடியாக எதனைமே சொல்ல வேண்டியதில்லை:
உலகு எங்கும் உள்ள இந்தியத் தூதரகங்கள் முன்னால் பல்லாயிரக்கணக்கில் திரண்டு நாம் நடத்தும் முற்றுகைப் போராட்டமே - சொல்ல வேண்டிய செய்தியை அந்தந்த நாட்டுத் தலைவர்களுக்குச் சொல்லும்.
படுகொலைப் பழியை இந்தியா மீது சுமத்தி - இந்தியாவை கூனிக்குறுக வைத்து - தமிழர்களின் விடயத்தில் இந்தியாவின் விருப்பத்தை மீறிய முடிவுகளை எடுக்கும் சூழலுக்குள் மேற்குலக நாடுகளை நாம் நிர்ப்பந்திக்க வேண்டும்.
மேற்குலக நாடுகளை அவ்வாறான முடிவுகளை எடுக்க வைப்பதன் மூலம் - சோனியா காந்தியின் குரூர விருப்பங்களை மீறிய முடிவுகளை எடுக்கும் சூழலுக்குள் காங்கிரஸ் தலைமையை நாம் நிர்ப்பந்திக்க வேண்டும்.
நாம் தெளிவாக இருப்போம் -
சிறிலங்கா அல்ல, இந்தியாவே தமிழர்களின் எதிரி. அதனையே நாம் இலக்கு வைக்க வேண்டும். மேற்குலக நாடுகளையும், அதன் தலைவர்களையும் நோக்கி எமது கவனத்தையும், சக்தியையும் சிதறவிடாமல் - இந்தியாவை நோக்கியே எமது எண்ணங்களையும், செயல்களையும் நாம் ஒருங்கு குவிக்க வேண்டும்.
ஒரேயடியாக - இந்தப் பிரச்சினைக்கு ஒரேயடியாக முடிவு கட்ட வேண்டும்.
இந்தியாவை நோக்கிய எமது செய்தி - உலகம் முழுவதிலும் - ஒன்றாகவே இருக்க வேண்டும்:
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு!தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அங்கீகரி!சிறிலங்காவுக்கான போர் உதவிகள் அனைத்தையும் நிறுத்து!

நன்றி

[ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2009, 05:36 மு.ப ஈழம்] [தி.வழுதி] புதினம் செய்தி பிரிவு

கோயில் கட்டுவதா"எதிர்கால பிரதமரின்" பணி?


20 ஆண்டுகளுக்கு முன்பு 2 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த ஒரு கட்சி மசூதியை இடித்துக் கோயில் கட்டவேண்டும் என்று பேசி - கிளர்ச்சி செய்து, இந்து மக்களின் மலிவான மத உணர்ச்சியைக் கிளப்பிவிட்டு ஊதிப் பெரிதாக்கி 184 எம்.பி.க்களைப் பெறும் அளவுக்கு மக்கள் ஏமாந்து போகும் நிலை ஏற்பட்டது. பின்னர் 5 ஆண்டுகளில் நாட்டை ஆளும் அவலம் கூட ஏற்பட்டுவிட்டது.


அவர்களின் ஆட்சிக் காலத்தில் எவ்வளவு மோசமாக இந்துமத வெறி தலை தூக்கி ஆடியது என்பதை நியாய உணர்வு கொண்ட எவரும் மறைக்கவோ, மறுக்கவோ மறக்கவோ முடியாது. முழுக்கவும் காவி மயமாக்க வேண்டும் என்பதால் கல்வியைக் கறைப்படுத்தினார்கள்.


பாட நூல்களை எல்லாம் மாற்றினார்கள். இந்து மதமே உயர்ந்தது என்பதைப்போலவும், ஆரியர்கள் சிறந்தவர்கள், உயர்ந்தவர்கள், அவர்களின் தந்தையர் நாடான பாரதம் பாரிலேயே உயர்ந்த நாடு - அதற்கு அடிப்படைக் காரணம் ஆரியக் கலாச்சாரம் என்றெல்லாம் கல்வித் திட்டத்தைத் தலைகீழாக மாற்றி எழுதிவிட்டார்கள்.


அறிவற்றவன் கடலில் தூக்கிப் போட்ட கல்லைத் தேடிக் கண்டுபிடிப்பது போன்ற கடினமான பணியில் பின்னர் வந்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஈடுபட்டுப் பெருத்த முயற்சிக்குப் பின் உண்மை வரலாற்றைச் சொல்லித் தரும் நிலையை உருவாக்கியது. ஆனாலும் இன்னும் திருத்தம் செய்ய வேண்டிய நிலை.


மதவெறி எவ்வளவு தூரம் சல்லடம் கட்டிக் கிளம்புகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு

"ராமர் கோவில் கட்டியே தீருவோம் "- பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் பேசுகிறார்!புதுடில்லி, பிப். 8- பாரதிய ஜனதாக் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்டியே தீருவோம்; அதற்கான உரிய வாய்ப்புக்காகக் காத்திருக்கிறோம் என்று அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

கோயில் கட்டுவதா"எதிர்கால பிரதமரின்" பணி?

நாங்கள் ராமனைவிட்டு விலகுவதுமில்லை; ராமனுக்குக் கோயில் கட்டும் ஆசையை விட்டுப் பிரிகிறதும் இல்லை" என்று பேசியுள்ளார் அத்வானி.ராமனுக்கே வெற்றி என்கிற பிற்போக்குத்தனமான முழக்கம் அவர்களின் இதயத்திலிருந்து வருகிறதாம்.பா.ஜ.கட்சி மீண்டும் பதவிக்கு வந்ததும் கோயிலைக் கட்டத் தொடங்குவார்களாம்! எதிர்காலப் பிரதமர், மக்கள் நல் வாழ்வுக்கான திட்டங்களைச் சொல்லிப் பிரச்சாரம் செய்யாமல் - மறைமுக மதவெறித் திட்டத்தைப் பேசுகிறார் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

Thursday, April 9, 2009

சரியான செருப்படி!

"போரென்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்" என்ற ஜெயலலிதாவின் பொன் முழக்கம் வரலாற்றில் இடம் பெற்றது போல இந்திரா காந்தி கொலையான 1984 ஆம் ஆண்டில் டெல்லியில் நடந்த சீக்கிய இனப் படுகொலையைப் பற்றி ” ஒரு ஆலமரம் விழுந்தால் பூமியில் அதன் பாதிப்பு இருக்கத்தான் செய்யும் ” என்று நியாயப்படுத்திய ராஜீவ் காந்தியின் திமிரும் வரலாற்றில் பதிவாக்கியிருக்கிறது. அந்தக் கலவரத்தில் டெல்லியில் உள்ள சீக்கிய மக்கள் காங்கிரசுக் கும்பல்களால் தேடித் தேடி கொல்லப்பட்டார்கள்.

இதுநாள் வரை அந்தக் கலவரத்திற்கு காரணமான பெரும்பான்மையான நபர்கள், தலைவர்கள் யாரும் தண்டிக்கப்படவில்லை. இடையில் அந்தக் கலவரத்திற்கு சீக்கிய மக்களிடம் மன்மோகன் சிங் மன்னிப்பு கேட்டு நடித்ததும் நடந்தது. ஆனால் இந்தக் கலவரத்தில் கொலைகாரக் கும்பலை வழிநடத்திய சஜ்ஜன் குமார், ஜகதீஷ் டைட்லர் இருவரும் குற்றவாளிகள் என பல வழக்குகளில் சேர்க்கப்பட்டிருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்து வந்த சி.பி.ஐ இருவரும் குற்றவாளிகள் இல்லை என பொய்யாக நற்சான்றிதழ் வழங்கியது. இதனால் இந்தக் கயவாளிகளை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட காங்கிரசு தீர்மானித்திருக்கிறது. அன்றைக்கு ராஜீவ் கொழுப்பெடுத்து சொன்னதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு?
இந்த அநீதியை எதிர்த்துத்தான் தைனிக் ஜாக்ரன் எனும் தினசரியில் பணியாற்றும் ஜார்னைல் சிங் என்ற பத்திரிகையாளர் டெல்லி காங்கிரசு தலைமயகத்தில் வைத்து நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சி.பி.ஐயை கட்டுப்படுத்தும் ப.சிதம்பரத்திடம் கேட்டார்.

கொலைகாரர்களை அங்கீகரிக்கும் காங்கிரசின் நயவஞ்சக்த்தை அதெல்லாம் ஒன்றுமில்லையென சிதம்பரம் பதில் கூற மறுத்த் போதுதான் அவர் சினமடைந்து செருப்பை வீசீனார். பின்னர் தனது நடவடிக்கை தவறென்றாலும் தான் எழுப்பிய பிரச்சினையும் கேள்வியும் இன்னமும் விடையளிக்கப்படாமல் உள்ளதென தெரிவித்தார்.

ப.சிதம்பரம் இந்த நிருபரை பெருந்தன்மையாக மன்னித்து விட்டாராம். சீக்கிய மக்களைக் கொன்ற கொலைகாரக் குற்றவாளிகளையே வேட்பாளர்களாக நியமித்த கட்சியின் நடவடிக்கை மட்டும் குற்றமாகத் தெரியவில்லை. நிச்சயம் சீக்கிய மக்கள் இந்தக் கயவாளிகளை மன்னிக்கமாட்டார்கள்.

ஈழத்திலும் இதுதான் நடந்து வருகிறது. தற்போது இந்திய இராணுவம் நேரடியாக வன்னிப்போரில் பங்கேற்றிருப்பது குறித்து பிரான்ஸ் செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டிருக்கிறது. மேலும் போரில் பயன்படும் விசவாயு உட்பட நவீன நாசாகார குண்டுகளெல்லாம் இந்தியாவின் நன்கொடையாக இலங்கை இராணுவத்திற்கு அளிக்கப்பட்டு தமிழ் மக்களை கொன்று வருகின்றன. இந்தியா நடத்தும் இந்தப்போரை எந்த அரசியல் கட்சிகளும் வாய் திறந்து பேசுவதில்லை. மாறாக போரை நிறுத்துவதற்கு இந்தியாவிடமே தமிழகத்தின் எல்லாத் தலைவர்களும் மன்றாடுகிறார்கள். எனவேதான் இந்தத் தேர்தல் என்பது தமிழ் மக்களின் தன்மான உணர்வை எடுத்துக்காட்ட வேண்டுமென்றால் புறக்கணிப்பின் மூலமே அதைச் செய்ய முடியுமென கூறுகிறோம்.

ஈழத்திற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கும் எதிரிகளாகவும், துரோகிகளாகவும் இருப்பவர்களும் பங்கேற்கும் இந்தத் தேர்தலைப் புறக்கணிப்பதுதான் நாம் செய்ய வேண்டிய சரியான செருப்படி

Tuesday, April 7, 2009

என்ன செய்யப்போகிறது தேர்தல் கமிஷன்?


லோக்சபா தேர்தல்களில் கட்சிகள் பெற்ற ஓட்டு விகிதத்தை விட ஓட்டுப் போடாதவர்கள் விகிதம் அதிகரித்து வருகிறது. நமது நாட்டில் 40 சதவீதம் பேரது விருப்பத்துக்கு மாறாகவே பிரதமர் தேர்வு செய்யப்படுகிறார். ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டுப் போடாதவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு, அரசியல் கட்சிகள் மீதான வெறுப்பு, கோடை வெயிலில் வரிசையில் காத்திருந்து ஓட்டுப் போட வேண்டுமா என்ற சோம்பல் தான் முக்கிய காரணங்கள்.

இந்தியாவில் இதுவரை நடந்த தேர்தல்களில், 1952ம் ஆண்டு தேர்தலில் 61.2 சதவீதமும், 1957ல் 62.2, 1962ல் 55, 1967ல் 61.3, 1971ல் 55.3, 1977ல் 60.5, 1980ல் 56.9, 1984ல் 64, 1989ல் 62, 1991ல் 61, 1996ம் ஆண்டு தேர்தலில் 57.94 சதவீதமும் ஓட்டுப் பதிவானது. தமிழகத்தில் 1996ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் 66 சதவீத ஓட்டுப் பதிவானது; 1998ல் 56 சதவீதமாக குறைந்தது. கடந்த 1999 லோக்சபா தேர்தலில் மொத்த வாக்காளர்கள் 60 கோடியே 23 லட்சம் பேர். அவற்றில் ஓட்டுப் போட்டவர் 37 கோடியே 37 லட்சம் பேர். 22 கோடியே 86 லட்சம் பேர் ஓட்டுப் போடவில்லை.

மாநில அளவில் அதிகபட்சமாக திரிபுராவில் 81 சதவீதம் ஓட்டுப் பதிவானது. மிகக் குறைந்த அளவாக காஷ்மீரில் 41 சதவீதம் ஓட்டுப் பதிவானது. நாட்டின் தலைநகரான டில்லியில் 51 சதவீதம் மக்கள் தான் ஓட்டுப் போட்டனர். இத்தேர்தலில் இந்தியாவில் 619 கட்சிகள் இருந்தன. ஆனால், 176 கட்சிகள் தான் தேர்தல் களத்தில் இறங்கின. அவற்றில் 138 கட்சிகளுக்கு 0.1 சதவீதத்துக்கும் குறைவான ஓட்டே கிடைத்தது. 37 கட்சிகள் தான் வெற்றி பெற்றன. 138 கட்சிகளுக்கு ஒரு சீட் கூட கிடைக்கவில்லை. மொத்த வாக்காளர் எண்ணிக்கையை கணக்கிட்டால் காங்கிரஸ் 16 சதவீதம், பா.ஜ., 15 சதவீதம், மார்க்சிஸ்ட் 3 சதவீதமும் ஓட்டு பெற்றன. அதேவேளை ஓட்டுப் போடாதவர்கள் 38 சதவீதம் பேர் இருந்தனர். அதாவது முதல் இரு இடங்களை பெற்ற காங்கிரஸ் மற்றும் பா.ஜ., பெற்ற ஓட்டை விட ஓட்டுப் போடாதவர்கள் தான் அதிகம்.

கடந்த 2004 தேர்தலின் போது தேசிய அளவில் மொத்த வாக்காளர்கள் 67 கோடி. ஆனால், 38 கோடியே 74 லட்சம் ஓட்டுகளே பதிவானது. இது 57.82 சதவீதமாகும். மீதமுள்ள 28 கோடி பேர் ஓட்டுப் போடாமல் இருந்து விட்டனர். இது 42.18 சதவீதமாகும். கேரளாவில் அதிகபட்சமாக 61 சதவீதம், தமிழகத்தில் 60.56 சதவீதம், தலைநகர் டில்லியில் 50 சதவீதம், புதுச்சேரி மற்றும் மேற்கு வங்கத்தில் 45, இமாச்சல பிரதேசம், அரியானா, பஞ்சாப், சண்டிகரில் 40 - 45, உத்தரகண்ட், உத்தரபிரதேசத்தில் 35, மிகக் குறைந்தபட்சமாக சிக்கிமில் 30 சதவீதம் ஓட்டுப் பதிவானது. வாக்காளர் பட்டியலில் ஏராளமானோர் பெயர் விடுபட்டதே இதற்கு காரணம் என கட்சிகள் குற்றம்சாட்டின.

இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி 26.69 சதவீதம், பா.ஜ., 22.16, மார்க்சிஸ்ட் 5.69, பகுஜன் 5.35, தேசியவாத காங்கிரஸ் 1.78, கம்யூனிஸ்ட் 1.40 சதவீதம் ஓட்டுகள் பெற்றன. ஆட்சியைப் பிடித்த காங்கிரஸ் பெற்ற ஓட்டு விகிதத்தை விட, ஓட்டுப் போடாதவர்கள் விகிதம் அதிகமாக இருந்தது. அதாவது, கடந்த முறை மன்மோகன் பிரதமரானது 57 சதவீதம் பேர் அளித்த ஓட்டால் மட்டுமே. மற்றவர்கள் ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன என்று இருந்து விட்டனர்.

-நன்றி-

தினமலர்

மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்!

சிலவேளை மாடுகள்
பட்டியை பிரிந்து செல்ல மறுத்திருக்கலாம்.
மேய்ச்சல் தரைகளில்
குண்டுகள் காத்திருந்தன.
மாதா மாடுகளை அழைத்து வைத்திருக்கிறாள்.
மிஞ்சியிருக்கும் இரண்டு
மாடுகளின்
சொற்கள் சேற்றில் புதைந்து கிடக்கின்றன.
மாதாவின் தலை
அவளது கைகளுக்கு
எட்டாமல் விழுந்திருக்கிறது.
மாடுகள் என்ன செய்திருக்கக் கூடும்.

தடைசெய்யப்பட்ட பிரதேசத்தில்
வாழுகிற மாடுகளாயிருந்தன.
தடைசெய்யப்பட்ட
குழந்தைகளுக்கு பால் கொடுத்திருந்தன.
ஒரு குழந்தை
வாய்க்காலில் மறைந்து தப்பியிருக்க
மாட்டுக்கன்றுகள்
பால் காயு முன்பாகவே
இறந்து கிடக்கின்றன.

கொம்பு முளைத்த மாடுகளிடம்
எந்தத்துவக்குகளும் இல்லை.
இராணுவ உடைகளையும்
அணிந்திருக்கவில்லை.
வெடித்துச் சிதறிய குண்டு
மாடுகளை அள்ளி எடுத்த
பட்டியில்
துணைக்கு ஒரு நாய் மட்டும் நிற்கிறது.

சிதறிய சதைகளை
தின்ன முடியாதிருக்கும் மீறிய பலிகளில்நாய் ஊளையிடுகிறது.
பாலுக்கு அழுகிற குழந்தை
தலை துண்டிக்கப்பட்டிருக்கிற
மாதாவை தேடுகிறது
இறந்த பசுவை
தேடுகிற கன்றினைபோல.

காயப்பட்ட உடல் பகுதியிலிருந்தும்
பட்டியிலிருந்தும்
மேய்ச்சலுக்காய் திரிந்த
தரைகளிலிருந்தும்
குருதிதான் பெருக்கெடுக்கிறது.
மாடுகள் என்ன செய்திருக்கக் கூடும்?

பசுக்கள் குழந்தைகளுக்கு
பாலினை கொடுத்தது
பெருந்தவறு என்கிறது பராசூட் கொத்தணிக்குண்டு.
வாய்களை மீறி
மாடுகளிடம் அழுகை வருகிறது.
அவைகள் எதையும் பேசப்போவதில்லை?
குண்டுகளோடும்
கட்டளையிடுகிற இராணுவத் தளபதிகளோடும்
அதிகாரத்தோடும்?
மாதாவிடமும் எந்த
திருச்சொற்களும் இல்லை.

மாதாவும் மாடுகளும்
வாய்பேசாத பிராணிகளாகவே இருக்க
மேய்ச்சல் தரைகளில்
மேலும் பல குண்டுகள் காத்திருந்தன.


24.12.2008 - குஞ்சுப்பரந்தன், மதாகோவில், 85மாடுகள்.
நன்றி - tamilinsight

Monday, April 6, 2009

விதி பழித்தல் !

விதி.,

எத்தனை முறை

என்னை வீழ்த்தினாலும்

மண்ணோடு மண்ணாய்

மக்கிபோவதற்கு

மரமல்ல - நான்...!

மரமல்ல நான்..,

விதை! -

நான் விதை..!

வேரூன்றி வெடித்தேழுவேன்..!

வினை கிழித்து முளைத்தேழுவேன்..!

விதியையே கொம்பாக்கி படர்வேன்..!

என் விழைவுகளால் விதியை மூடுவேன்..!

என் எண்ணங்களையே

வண்ண மலர்களாக்கி ,

வான் நோக்கி பூத்து சிரிப்பேன் ..!

நான் தரும் நிழலில்

விதியே வந்து இளைப்பாறு

என்பேன்

- நன்றி -

என் அன்பு நண்பர்

தமிழ் ஆர்வலர் திரு . இரமேசு

Sunday, April 5, 2009

வேண்டுவீர்களா மனித தெய்வங்களே.........??



வாழ்வதற்காக நான் படைத்த என் மக்கள்

வாழ்வைத் தொலைத்து வீதியில் வழிதவறி

அடிப்படைத் தேவைக்கே அல்லல் பட,

எனைக் காப்பதாய் நினைத்து நீ

கடிவாலமிட்டுச் சென்ற கட்டிடத்திற்குள்

கதறிக் கொண்டிருக்கிறேன் நான்..

அழத்தெரியாமலே அழும் பிஞ்சுகள்...::::

உயர்ந்தோர் என்பதால் இஸ்ரேலிடம் பாலஸ்தீனமும்......

சிங்களத்திடம் தமிழ் ஈழமும்.....

வீழ்ந்து கொடிருக்கிறது....!!!!எஞ்சி இருப்பது கண்ணீர் மட்டும்தான்...

அதை கொண்டு யாரிடம் போரிட.......,

கடவுளிடமா..? மனிதர்களிடமா...???

எவ்வளவு தேடியும் இவர்களை பார்க்கமுடியவில்லை..!!!

தாழ்ந்தவர்கள் என்பதால் இன்று வீழ்ந்து போகிறோம்.....

வாழ்ந்து பார்க்க ஆசையாய் இருந்தும்..!!!!

உயர்ந்தோரே நாங்கள் அழிந்த பிறகு...

எங்கள் கண்ணீர் கதறலை வரலாறு பேசும்...

உங்கள் குழந்தைகளும் படித்து அழும்.!!

அந்த கண் நீரிலாவது மிருகத்தை கரைத்து...

மனிதனாய் வாருங்கள்....

எங்கள் பிஞ்சுகலாவது மனிதர்களை பார்க்கட்டும்..!!!

அழக்கூட தெரியாமலே அழும்....எங்கள் குழந்தைகளுக்காய்,

ஓரு முறை வேண்டுங்கள்..!!

இருக்க ஆசைப்படும் முடியவில்லை...

இதோ இறக்கிறோம் ........

மரணத்தின் மயக்கத்தில் இருக்கும் எங்கள் .......பிஞ்சுகளுக்காய்,

வேண்டுவீர்களா மனித தெய்வங்களே.........??

நன்றி

அன்பு தோழர்

- திரு.இராஜா சிங்

Saturday, April 4, 2009

தமிழுக்கே இரையாவோம்.ஆம் , தமிழுக்கே இரையாவோம்.!



சோறின்றி , சாரின்றி ,
நீரின்றி , மோரின்றி , நாங்கள்
தவிக்குதல் கேட்கலையோ
தாழ்ந்த தமிழகமே?



பிணந்தின்னிக் கழுகுகள் கூட்டம்.......
போட்டியாய் குண்டு வீசும் விமானக் கூட்டம்....

பிறந்தவுடன் எறிக்கணைக்கு
விருந்தாகும் பிஞ்சுக்குழந்தைகள்.........
பதுங்குகுழிகள் தான் பஞ்சு மெத்தை....
பாதி இறப்புகள் தான் குண்டுவீச்சுக் கணக்கு...
மீதி இறப்புகள் பட்டினியின் கணக்கு........
ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்
ஆலமரம் போல வளர்ந்த இனம் , இன்று
அக்கினிக்கு இறையாகும் அவலமென்ன?

காடு செதுக்கி , பூமி செதுக்கி
கழனியாக்கி சோறு போட்டோம்.
சொல்லால் இனிமை காட்டி
வில்லால் வீரம் காட்டி
நெல்லால் பசி போக்கி
அல்லல் தீர்த்து வைத்தோம்........!
கல்லணையைக் கட்டினானாம் ,
இமயத்தைக் கொண்டானாம்,
கங்கையைக் கொண்டானாம் ,
கலிங்கத்துப் பரணியுண்டாம்,
முறத்தினில் புலி விரட்டினாளாம் ,
போர் வா மகனே போருக்கு என்று
போர்பரணி பாடினாளாம் ...............!
வீரத்தின் விளைநிலமாம்........
வீரவாஞ்சிநாதனும் பிறந்தானாம்.........
சாவளங் கண்டானாம்....
சாவுக்கு அஞ்சானாம்.....
கண்ணகி இருந்தாளாம்.அவள்
கண்ணசைவில் மதுரை எரிந்ததுவாம்.......
இத்துணை கதைகள் உண்டாம்
எம் வீரத் தமிழினம் பற்றி........
அவையாவும் நாற்பது நாடாளுமன்ற
உறுப்பினர்களுக்காக மறக்கப்பட்டதாம்...
இதுவும் வரலாறு...ச்சீ
இதுவா வரலாறு?? அய்யகோ
இதுவா தமிழினம்?
இந்தத் தமிழினத்தைக் காக்கவா எம்
இன்னுயிரை பறிகொடுத்தோம்?இந்தி திணிப்பிற்கே
தாங்கமாட்டா தமிழினம் இன்று
தாங்கவொண்ணா துயரம் கண்டும் சும்மா இருப்பதுவேன்?
அம்மா முடியலையே என்று சிறு குழந்தை
அழுவதை மறந்தது ஏன்?



சோறின்றி , சாரின்றி ,
நீரின்றி , மோரின்றி , நாங்கள்
தவிக்குதல் கேட்கலையோ
தாழ்ந்த தமிழகமே?



தமிழாய்ப் பிறந்து ,
தமிழால் வளர்ந்து ,


தமிழுக்காய்ப் போராடி ,
தமிழுக்கே இரையானோம்..........
தமிழுக்கே இரையாவோம்.........!
ஆம் , தமிழுக்கே இரையாவோம்
.

நன்றி - மதிபாலா பதிப்பகம் -